கடந்த வாரம் வெளியான இந்த செய்தி குறித்து, வாசகர்கள் எந்த அளவிற்கு சட்ட விதிப்படி சிந்திக்கிறார்கள் என்பதை அறிய, அவர்களின் கருத்தை கேட்டிருந்தோம்.
கருத்து சொன்ன பலரும், உயர்நீதிமன்ற நிதிபதியின் கருத்து சரியாகத்தான் இருக்கிறது என்றும், நாம் கேள்வி எழுப்பியதாலேயே நிச்சயம் தவறு இருக்கவே செய்யும் என்ற நம்பிக்கையில், தவறாகத்தான் இருக்கும் என்ற கருத்தைப் பதிவு செய்திருந்தாலும்...
யாருமே எந்த விதத்தில் சரி என்றோ அல்லது தவறு என்றோ சட்ட விதிப்படி விளக்கம் அளிக்கவில்லை என்பதன் மூலம், வாசகர்கள் சட்ட விழிப்பறிவுணர்வில் எந்த அளவிற்கு புலமையோடு இருக்கிறார்கள் என்பதையும் அறிய முடிந்தது!
இதுபோன்றதொரு சட்டப் பிரச்சினைகள் அவர்களுக்கு வந்தால், பொய்யர்களுக்கு தெரியும் என பொய்யர்களிடம் போவார்களோ...! அல்லது வேறென்ன செய்வார்களோ...??? தெரியவில்லை.
நம் சமூகத்திற்கான சட்ட ஆராய்ச்சியாளராக நம் ஆசிரியர் திரு. வாரண்ட் பாலா அவர்கள் மிக மிக எளிதாக புரியும் விதத்தில் சட்ட விதிகளை விளக்கியும் கூட, இதபோன்ற கேள்விகளுக்கு வாசகர்கள் சிந்திக்காமல் இருக்கிறார்கள் என்றால், இந்த வாசகர்கள் நம் சமூகத்திற்காக என்ன கடமையை செய்வார்கள்? என்ற நியாயமான கேள்வியும் எழுகிறது.

சரி நம்ம விசயத்துக்கு வருவோம்.
பொதுவாக ஒருவர் சொல்லும் கருத்தை கேட்கும் போது, அந்த நேரத்தில் அது மிகவும் சரியே என்றுதான் எண்ணத் தோன்றும். ஏனெனில், அப்போது அதுபற்றி சிந்திக்க நமக்கு போதிய நேரம் இருப்பதில்லை.
பின் ஓய்வு நேரம் இருக்கும்போது சிந்தித்தால், அதிலுள்ள உண்மையும், பொய்யும் ஓரளவுக்கேனும் விளங்கி விடும். இதனை அடிப்படையாக கொண்டு மேன்மேலும் சிந்தித்தோ அல்லது சம்பந்தப்பட்ட நபரிடம் கேள்வி எழுப்பியோ கிடைக்கும் பதிலின் மூலம் முடிவுக்கு வர முடியும்.
இது பொதுவான இலக்கணமே ஒழிய, எல்லாவற்றுக்கும் பொருந்தி விடாது. சங்கதிக்கு தக்கபடி மாறும்.
ஆமாம், இதையே ஒரு தீர்ப்பு பற்றி சிந்திக்க வேண்டும் என்றால், முதலில் அந்த தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ள சட்ட சங்கதிகள் நமக்கு அத்துபடியா என்பதில், போதிய தெளிவு இருக்க வேண்டுமே ஒழிய, போதை தெளிவில் இருக்கவே கூடாது. ஆகையால், முதலில் அதில் தெளிவைப் பெற வேண்டும்.
பின்பு தீர்ப்பில் உள்ள சங்கதிகளை அதோடு ஒப்பிட்டு பார்த்தால், நிதிபதியால் சொல்லப்பட்ட தீர்ப்பு சட்ட விதிப்படிதான் சொல்லப்பட்டு உள்ளதா... அல்லது அவரது இஷ்டப்படி சொல்லப்பட்டு உள்ளதா என்பது விளங்கி விடும்.
இதுவே, நம் ஆசிரியர் திரு. வாரண்ட் பாலா அவர்கள் சட்ட விதிப்படி தீர்ப்புகளை ஆராயும் மேன்மையான அணுகு முறை. இதோடு, சட்ட விதிகளில் உள்ள சங்கதிகள் அடிப்படை சட்டங்கள் ஐந்துக்கு எதிராக அல்லது முரண்படாமல் இருக்கிறதா... நியாயமாக இருக்கிறதா... என்பதை அறியும் திறன் ஒரளவுக்காவது வேண்டும்.
இந்த அடிப்படையில், மேற்கண்ட தீர்ப்பை கீழ்கண்ட சட்ட விதியோடு ஒப்பிட்டு சரியா... பிழையா என அறிய முற்படுவோம். குற்ற விசாரணை முறை விதிகள் 1973 இன் விதி 311 சொல்வது என்ன?
அதாவது அரசுத்தரப்பு சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டுமா... வேண்டாமா என்பதே இதில் நாம் தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினை.
அரசுத்தரப்பு சாட்சிகள் 2012 ஆம் ஆண்டில் சாட்சியம் அளித்து உள்ளனர். அவர்களை மீண்டும் குறுக்கு விசாரணைக்கு அழைப்பது தவறு என்பது, உயர்நீதிமன்ற நிதிபதியின் கூற்று.
இதன் மூலம் நாம் தெரிந்துக் கொள்ள வேண்டியது, இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது. அதில் ஏழு ஆண்டுகள் கழித்து அரசுத்தரப்பு சாட்சிகளை மறு குறுக்கு விசாரணைக்கு அழைத்தால், அவர்களது ஞாபக மறதியில் முன்னுக்குப் பின் முரணாக சாட்சி சொல்ல நேரிடலாம் என்பது நிதிபதியின் கருத்து.
ஒருவர் சாட்சியம் அளித்து விட்டால், அதன் மீது அவரை குறுக்கு விசாரணை செய்யவும், தேவைப்பட்டால் மீண்டும் அவரை அழைத்து மறு குறுக்கு விசாரணை செய்யவும் அவரது தரப்புக்கும், எதிர்தரப்புக்கும் உரிமை உண்டு.
மேலும் விசாரணை என்பது, புகார்தரப்பினர் சாட்சி சொல்ல ஆரம்பித்ததில் இருந்து, தங்களது வாதங்களை தொடர்வதற்கு முன்பு வரை என்பதால், அதுவரை மறு விசாரணை செய்ய உரிமையுண்டு.
ஆகையால், ‘‘குற்றம் ஏழு வருடமாக விசாரணையை முடிக்காமல் இருக்கும் கீழமை நிதிபதியுடையதே தவிர, எதிர்த்தரப்புடையது அல்ல’’ என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டுமே அன்றி, விலங்குபோல (உயர்நீதிமன்ற நிதிபதியைப் போல) முடிவெடுக்கக் கூடாது.
ஒரு வழக்கில் சாட்சிகளை மீண்டும் விசாரிக்க, நியாயப்படி ஒரு வாய்ப்பு மட்டுமே தரலாம். அப்படி தந்திருந்தாலும் வழக்கு விசாரணை முடிந்திருக்க வேண்டும். ஆனால், கீழமை நீதிமன்றத்தில் நடக்கும் இந்த வழக்கில் எத்தனை முறை விசாரணைக்கு அழைத்தார்கள்; எத்தனை முறை அனுமதி அளிக்கப் பட்டது என்பது தெரியவில்லை.
ஆனால், மீண்டும் மீண்டும் அழைக்க முடியாது என பத்திரிகை செய்தியில் உள்ளபடி, பலமுறை அழைக்கப்பட்டு இருந்தால், அதைத்தான் முக்கிய காரணமாக நிதிபதி சொல்லி இருக்க வேண்டும். அப்படி சொல்லாததால், ஒரு முறை கூட அழைக்கப் படவில்லை என்றே எடுத்துக் கொள்வோம்.
சட்ட விதிகளின்படி தீர்ப்புகள் தெளிவாக சொல்லப்பட வேண்டும் என்றாலும், நிதிபதிகளின் அபார அறிவு வறுமையின் காரணமாக அப்படி சொல்லப்படுவது இல்லை.
ஆமாம், ஞாபக மறதியில் முன்னுக்குப் பின் முரணாக சாட்சி சொல்ல நேரிடலாம் என்பது நிதிபதியின் கருத்தும் சட்ட அறிவின்மையின் அடையாளமே!
இந்திய சாட்சிய சட்ட உறுபு 159 இன்படி, சாட்சியம் அளிக்கும் ஒருவர், ஏதாவதொரு சங்கதியைப் பற்றி நினைவுபடுத்திக் கொள்ள வேண்டி இருந்தால், அதனைப் பார்வையிட உரிமையுண்டு. சட்டம் எப்படி எல்லாம் நியாயமாக இருக்கிறது என்பதற்கு, இதுவும் நல்லதொரு உண்மை.
ஆகவே, உயர்நீதிமன்ற நிதிபதியின் முடிவு சட்ட விதிகளின்படியும், நியாயப்படியும் தவறே என்பது, இப்போது உங்களுக்கு நன்றாகவே விளங்கி இருக்கும்.
சட்டத்தை ஆராயும் நமக்கு நன்றாக தெரியும், இதெல்லாம் பெ(ரு, று)ம் கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களுக்கும், நிதிபதிகளுக்கு தெரிவதில்லை. இதனால், பாதிக்கப்படுவது மக்களும், மக்களுக்கான சமூக நீதியும்தான்!
இந்த அடிப்படையில், மேற்கண்ட தீர்ப்பை கீழ்கண்ட சட்ட விதியோடு ஒப்பிட்டு சரியா... பிழையா என அறிய முற்படுவோம். குற்ற விசாரணை முறை விதிகள் 1973 இன் விதி 311 சொல்வது என்ன?
அதாவது அரசுத்தரப்பு சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டுமா... வேண்டாமா என்பதே இதில் நாம் தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினை.
அரசுத்தரப்பு சாட்சிகள் 2012 ஆம் ஆண்டில் சாட்சியம் அளித்து உள்ளனர். அவர்களை மீண்டும் குறுக்கு விசாரணைக்கு அழைப்பது தவறு என்பது, உயர்நீதிமன்ற நிதிபதியின் கூற்று.
இதன் மூலம் நாம் தெரிந்துக் கொள்ள வேண்டியது, இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது. அதில் ஏழு ஆண்டுகள் கழித்து அரசுத்தரப்பு சாட்சிகளை மறு குறுக்கு விசாரணைக்கு அழைத்தால், அவர்களது ஞாபக மறதியில் முன்னுக்குப் பின் முரணாக சாட்சி சொல்ல நேரிடலாம் என்பது நிதிபதியின் கருத்து.
ஒருவர் சாட்சியம் அளித்து விட்டால், அதன் மீது அவரை குறுக்கு விசாரணை செய்யவும், தேவைப்பட்டால் மீண்டும் அவரை அழைத்து மறு குறுக்கு விசாரணை செய்யவும் அவரது தரப்புக்கும், எதிர்தரப்புக்கும் உரிமை உண்டு.
மேலும் விசாரணை என்பது, புகார்தரப்பினர் சாட்சி சொல்ல ஆரம்பித்ததில் இருந்து, தங்களது வாதங்களை தொடர்வதற்கு முன்பு வரை என்பதால், அதுவரை மறு விசாரணை செய்ய உரிமையுண்டு.
ஆகையால், ‘‘குற்றம் ஏழு வருடமாக விசாரணையை முடிக்காமல் இருக்கும் கீழமை நிதிபதியுடையதே தவிர, எதிர்த்தரப்புடையது அல்ல’’ என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டுமே அன்றி, விலங்குபோல (உயர்நீதிமன்ற நிதிபதியைப் போல) முடிவெடுக்கக் கூடாது.
ஒரு வழக்கில் சாட்சிகளை மீண்டும் விசாரிக்க, நியாயப்படி ஒரு வாய்ப்பு மட்டுமே தரலாம். அப்படி தந்திருந்தாலும் வழக்கு விசாரணை முடிந்திருக்க வேண்டும். ஆனால், கீழமை நீதிமன்றத்தில் நடக்கும் இந்த வழக்கில் எத்தனை முறை விசாரணைக்கு அழைத்தார்கள்; எத்தனை முறை அனுமதி அளிக்கப் பட்டது என்பது தெரியவில்லை.
ஆனால், மீண்டும் மீண்டும் அழைக்க முடியாது என பத்திரிகை செய்தியில் உள்ளபடி, பலமுறை அழைக்கப்பட்டு இருந்தால், அதைத்தான் முக்கிய காரணமாக நிதிபதி சொல்லி இருக்க வேண்டும். அப்படி சொல்லாததால், ஒரு முறை கூட அழைக்கப் படவில்லை என்றே எடுத்துக் கொள்வோம்.
சட்ட விதிகளின்படி தீர்ப்புகள் தெளிவாக சொல்லப்பட வேண்டும் என்றாலும், நிதிபதிகளின் அபார அறிவு வறுமையின் காரணமாக அப்படி சொல்லப்படுவது இல்லை.
ஆமாம், ஞாபக மறதியில் முன்னுக்குப் பின் முரணாக சாட்சி சொல்ல நேரிடலாம் என்பது நிதிபதியின் கருத்தும் சட்ட அறிவின்மையின் அடையாளமே!
இந்திய சாட்சிய சட்ட உறுபு 159 இன்படி, சாட்சியம் அளிக்கும் ஒருவர், ஏதாவதொரு சங்கதியைப் பற்றி நினைவுபடுத்திக் கொள்ள வேண்டி இருந்தால், அதனைப் பார்வையிட உரிமையுண்டு. சட்டம் எப்படி எல்லாம் நியாயமாக இருக்கிறது என்பதற்கு, இதுவும் நல்லதொரு உண்மை.
ஆகவே, உயர்நீதிமன்ற நிதிபதியின் முடிவு சட்ட விதிகளின்படியும், நியாயப்படியும் தவறே என்பது, இப்போது உங்களுக்கு நன்றாகவே விளங்கி இருக்கும்.
சட்டத்தை ஆராயும் நமக்கு நன்றாக தெரியும், இதெல்லாம் பெ(ரு, று)ம் கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களுக்கும், நிதிபதிகளுக்கு தெரிவதில்லை. இதனால், பாதிக்கப்படுவது மக்களும், மக்களுக்கான சமூக நீதியும்தான்!
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment