‘‘தீதும், நன்றும் பிறர்தர வாரா’’ என்பது நம் தமிழ் முன்னோர்களின் முதுமொழி!
இதற்கேற்ப இன்று தமிழும், தமிழனும் தரம் தாழ்ந்து தலைகுனிந்து நிற்பதற்கு காரணமும், தமிழர்களே அன்றி மற்றவர்கள் அல்ல என்பதை தங்களின் வசதிக்காக மறைத்து, மற்றவர்கள் மீது குற்றம் சுமத்துவதையே வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
இதை மறுப்பவர்கள், முன்னோர்களின் முதுமொழிதான் தவறென்று சொல்ல வேண்டும். ஆனால், அப்படியும் சொல்வதில்லை.
எங்களுக்கு மட்டுமல்ல; சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டாக நெடும் காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது என்பது நாம் எல்லோரும் நன்கு அறிந்ததே! இதனை நம்மை விட வயதில் மிக மூத்தப் பெரியவர்களும் உறுதி செய்கிறார்கள். அவர்களுக்கு அவர்களின் முன்னோர்கள் உறுதி செய்ததன் மூலம், இதன் பழம்பெரும் தொடர்பு என்னவென்று தெரிகிறது.
நமக்கு தெரிய தமிழ்ப் புத்தாண்டு சித்திரை முதல் நாளா அல்லது தை முதல் நாளா என்ற சர்ச்சை முதன் முதலாகவும், கடைசியாகவும் கருணாநிதி முத(லை, ல்) அமைச்சராக இருந்த காலத்தில்தான் உருவானது; அல்ல அல்ல திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்றே கருத வேண்டி உள்ளது.
ஆமாம், இதற்கு முன்பாக இப்படியொரு சர்ச்சை இருந்ததற்கான அறிகுறிகளே இல்லை என்பதால், நாங்களே தமிழர்கள், தமிழர்களின் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ள முயன்ற தற்குறிகளின் திட்டமிட்ட செயலே தீராத சர்ச்சையாக இருக்கிறது.
உண்மையில், சித்திரை முதல்திருநாளே தமிழர்களின் வருடப்பிறப்பு என்றால், இதை பெரியாரும், அண்ணாவும் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே அறிவித்து இருப்பார்களே?
அண்ணாவுக்குப் பின், அத்தனை ஆண்டுகள் முதல் அமைச்சராக இருந்த கருணாநிதியும் அப்போதே அறிவிக்காமல் கடைசியாக இருந்தபோது அறிவிக்க காரணம் ‘‘தான் சொல்வதே என்ற தற்குறித்தனம் தானேயன்றி வேறு காரணம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை’’.
எது எப்படி இருப்பினும், நாங்களே தமிழர்கள், தமிழைக் காப்பாற்ற வந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டு திரியும் தற்குறிகளை தவிர, மற்றபடி உலகெங்கிலும் உள்ளத் தமிழர்கள் அனைவரும் வழி வழியாகவும், வழக்கம் போலவும் சித்திரை முதல் நாளையே ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடுகிறார்கள்.
தமிழக சட்ட சபையில் தலைமை அரசியல் வியாதியாக இருப்பது ஆரியனா அல்லது திராவிடனா அல்லது அவரவர்களது ஆதரவைப் பெற்றவர்களா என்பதைப் பொறுத்து, தமிழ் வருடப்பிறப்பு மாறிமாறி கொண்டாடப்படுகிறது என்றால்..,
இப்படிப்பட்ட கேவலமான ஒரு வருடப்பிறப்பு கொண்டாட்டம் நமக்கு தேவைதானா என்ற நியாயமான கேள்வி நடுநிலையாளர்கள் எல்லோரது மனதிலும் இருந்தாலுங்கூட, ‘‘நாங்களே தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ளும் தற்குறிகள், எங்கே நம்மை தமிழர் விரோதி என்று சொல்லி விடுவார்களே’’ என்ற எண்ணத்திலேயே தானுன்டு, தன் வேலையுண்டு என கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள்.
ஏனெனில், இதற்கு முன்பாக உலகின் முதல்குடி, மூத்த குடி என்று சொல்லிக் கொள்கிற தமிழ் இனத்தில் இப்படியொரு சர்ச்சை இருந்ததாகவே தெரியவில்லை.
மேலும், உலகின் வேறெந்த மொழியைத் தாய் மொழியாக கொண்ட இனத்திலும் இதுபோன்ற ஆரியன், திராவிடன் என்ற சாக்கடைத் தனமான சண்டையும், வருடப் பிறப்பு சச்சரவுகளும் இருப்பதாக தெரியவில்லை.
மேலும் கன்னடம் தெலுங்கு ஆகியவற்றை தாய்மொழியாக கொண்டவர்கள், குறிப்பிட்ட ஒரே நாளில் தங்களின் வருடப் பிறப்பை கொண்டாடுகிறார்கள் எனவும் தெரிகிறது.
ஆகையால், ‘‘தமிழன் என்று சொல்லடா; தலை நிமிர்ந்து நில்லடா என்று நாமே சொல்லி வீர வசனத்தை, இனி தமிழன் என்று சொல்லடா; தலைக்குனிந்து நில்லடா’’ என்று மற்றவர்கள் சொல்லும் இழிநிலமை விரைவில், நமக்கு வந்து விடும் போலிருக்கு!
ஆகையால், இனி ஒவ்வொரு தமிழனும் தமிழனாய் பிறந்ததற்கு பெருமைப்படுவது போலவே, இனி வெட்கப்படவும் வேண்டி இருக்கும் போலிருக்கு.
இந்த இழிநிலைகள் ஏற்படாமல் தடுக்க, நம்மால் என்ன செய்ய முடியும் என நீங்கள் நினைத்தால், உண்மையில் தமிழ்ப் புத்தாண்டு என்பது தமிழை தாய்மொழியாகக் கொண்ட ஒவ்வொரு தமிழர்களும் தாங்கள் விரும்பியபடி கொண்டாட வேண்டியது தானேயன்றி, இந்த நாளில்தான் கொண்டாட வேண்டுமென்று சொல்லி அரசியல் செய்வதற்கு அது ஆரியருடைய சொத்தோ அல்லது திராவிடர்களின் சொத்தோ அல்லது தமிழ் தற்குறிகளின் சொத்தோ அல்லது வேறு எவருடைய சொத்தோ அல்ல.
எனவே, இனி தமிழைத் தாய்மொழியாக கொண்டவர்களும், தமிழை நேசிப்பவர்களும் தாங்கள் விரும்பும் ஒரு நாளில் / நந்நாளில் / பிறந்தநாள் உள்ளிட்ட சிறப்பாக நினைவு கூறத்தக்க ஏதோவொரு நாட்களில் தமிழ் வருடப் பிறப்பை கொண்டாடுங்கள். இதையுங்கூட, உங்களுக்கு ஏற்ற வகையில் வருடா வருடம் மாற்றிக் கொள்ளுங்கள்.
அது சித்திரையாக இருந்தால் என்ன... தையாக இருந்தால் என்ன... அல்லது நாம் விரும்பும் வேறெந்த நாளாக இருந்தால் என்ன... ஒவ்வொரு நாளும் தமிழ்க் கொண்டாட்டமாக இருக்கும் என்பதோடு, இப்படி கொண்டாட ஆரம்பித்தால் ஆரிய, திராவிட, தமிழ்த் தற்குறிகள் உள்ளிட்ட அவரவரின் ஆட்டமும் தானாக அடங்கி விடும். அவ்வளவே!
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment