நீதிபதி என்ற சொல்லை அகராதியில் இருந்தே எடுத்து விட வேண்டும் என்கிற அளவிற்கு, நிதிபதிகள் கூலிக்கு மாரடிக்கும் அநீதிபதிகளாகவே ஆகிவிட்டார்கள் என்று மகாத்மா காந்தி 120 வருடங்களுக்கு முன்பே வேறுவிதமாக சொல்லி விட்டார்.
ஆனாலும், நம் வரிப்பணத்தில் கூலி வாங்கிக் கொண்டு, நமக்காக வேலை செய்ய வேண்டிய நிதிபதிகளை நாம் விடுவதாக இல்லை. அவர்கள் சட்டப்படி தப்பிக்கவும் முடியாது.
இதற்காக நிதிபதிகளுக்கு நாம் சட்ட விதிகளை குறிப்பிட்டு கொடுக்குற மனுக்கள் எல்லாமே புதிதுதான்.
அதாவது, நாம் சட்டங்களை ஆராய்ச்சி செய்து, ஆராய்ச்சி செய்து குறிப்பிட்டுக் கொடுக்கும் சட்ட விதிகளை, வக்கீழ் பொய்யர்களின் வழிவந்த நிதிபதிகள் கண்ணால் கூட பார்த்திருக்க மாட்டாங்க. அதனால, இந்தப் பிரிவுகளில் எல்லாம் கூட, மனு கொடுக்க முடியுமா என நம்மைப் பார்த்து வியப்பார்கள்.
ஆமாம், இந்தியாவில் இப்படியெல்லாம் வேறு யாரும் கொடுத்திருக்கவே மாட்டாய்ங்க. அப்படியொரு சாதனை செய்திதான் இது!
(சா, கா)ட்சி - 1 சட்டப்படியே சாதனை படைத்த மனு
நீ கொடுக்கும் மனுவை, நான் எந்த வழியிலும் வாங்கமாட்டேன் என்றும், தன்னைமுட்டாள் என்றும் சொல்லி முட்டாள்தனமாக நடந்துக் கொண்டிருந்த தாராபுரம் குற்றவியல் நடுவர் சி. சசிக்குமாருக்கு இப்படியொரு புதிய கண்டுப் பிடிப்பு சட்ட விதியோடு கூடிய மனுவை, நம்ம புது வாசகி வித்யா, நம்ம முட்டாள் நிதிபதி சசிகுமாருக்கு மேலுள்ள மாவட்ட குற்றவியல் நிதிபதியிடம், குற்ற விசாரணை முறை விதிகள் 1973 இன் விதி 12 இன்கீழ் கடந்த 21-10-2019 அன்று காலையில் கொடுத்தாள்.
இந்த விதியிலும் மனு கொடுக்கலாம் என்பது பொய்யர்களுக்கு தெரிந்தால், ஓ இப்படியொரு வழி இருக்கா? எனவும், இப்படியெல்லாம் திணுசு திணுசா கண்டு பிடித்து நம் வயிற்றுப் பிழைப்புக்கு புதுப்புது ஆப்பா அடிக்கிறோமேன்னும் நினைப்பாய்ங்க!
நம்முடைய இந்த கண்டுப் பிடிப்புக்கு காரணமாய் இருந்த, நம்ம முட்டாள் நிதிபதி சி. சசிகுமாருக்கு நன்றி கூட சொல்லலாம்!!
ஆமாம், ஒரு வட்டாச்சியரைப் போல, அந்த வட்டத்தில் உள்ள குற்றவியல் நிதிபதிகளின் முட்டாள்தனமான முடிவுக்கு எதிராக, மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு சென்றுதான் திருத்தி கொள்ள முடியும், தீர்வு காண முடியும் என்ற முட்டாள்தனத்தை, சரியான சட்ட அறிவின்மையாலும் வயிற்றுப் பிழைப்புக்காகவும் நடைமுறையில் வைத்திருக்கிறார்கள்.
ஆனால், நம்முடைய ‘‘
நீ வாழ நீயே வாதாடு!’’ கொள்கையில், எந்த நிதிபதி சட்ட விதிகளை மீறி தவறு செய்தாலும், அதனை அமலில் உள்ள சட்ட விதிகளின்படியும், ‘‘
நியாயந்தான் சட்டம்’’ என்ற தத்துவத்தின் படியும்,
அந்த நிதிபதியையே திருத்த வைத்து தக்க பாடம் புகட்ட வேண்டும் என்பதை, நம் ஆசிரியர் திரு. வாரண்ட் பாலா அவர்கள், தன் அனுபவத்தோடு நூல்களில் எழுதி உள்ளாரே!
இதன்படி, இவளிடம் நேரிலும், பதிவு அஞ்சலிலும் வாங்க மறுத்த அதே மனுக்களை வரும் 24-10-2019 அன்றைய விசாரணையில், தன்னை முட்டாள் என்று ஒப்புக் கொண்ட, நம் முட்டாள் நிதிபதி சசிக்குமாரே சட்டப்படி விசாரிக்க வேண்டுமென்ற கட்டாயத்தை, மாவட்ட தலைமை குற்றவியல் நடுவருக்கு நாம் எழுதிக் கொடுத்த மனுவைக் கொண்டு சாதித்து காட்டி விட்டாள்.
ஆமாம், இந்த மனுக்களை எல்லாம் நீ விசாரணை செய்துதான் ஆகவேண்டுமென்று அறிவுறுத்தும் சட்டப்படி நாம் சொன்ன மேற்குறிப்புடன் அந்த மனுக்களை, முட்டாள் நிதிபதி சி. சசிக்குமாருக்கே அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம் என்று கூறி, அம்மனுவை பெற்றுக் கொண்டதற்கான எண்ணாக 5432 / 2019 என்று கொடுத்திருக்கிறார்கள்.
(சா, கா)ட்சி - 2 பயந்து கழிந்த நிதிபதிகள்
இதற்கு இடையில், நம்முடைய அறிவுப்பூர்வமான இந்த சட்ட நடவடிக்கையை சீர்குலைத்து திசை திருப்பும் விதமாக, மாவட்ட முதன்மை அமர்வு (PDJ) நீதிமன்ற ஊழியரிடம் இருந்து இவளுக்கு அழைப்பு வந்தது.
அதாவது நம்மை தொடர்பு கொள்வதற்கு சட்டப்படி என்ன செய்ய வேண்டுமென தெரியாமல், தன் மகனையும், கணவனையும் பிணையில் விடுவிக்க வேண்டுமென்று கெஞ்சிக் கூத்தாடி, 27-09-2019 அன்று இவளும், இவளது மாமியாரும் எழுதிய கடிதம் பதிவு அஞ்சல் மூலம் 01-10-2019 அன்று மாவட்ட நிதிபதிக்கு சேர்ந்துள்ளது. ஆனால், பதில் இல்லை.
ஆகையால், பொய்யன் ஒருவனை வைத்து பிணைக்கான மனுவை தாக்கல் செய்ய, அந்த மனு குற்றப் பல்வகை மனு எண் 1200 தேதி 03-10-2010 அன்று தாக்கல் செய்ய அது 15-09-2019 அன்று விசாரணைக்கு வர இருந்தது.
அதற்கு முன்பாக கடந்த 09-10-2019 அன்று நம்மை தொடர்புக் கொண்டதாலும், நாமும் சட்டப்படியே மனு எழுதிக் கொடுத்து விட்டதாலும், கூடுதலாக நம் நூல்களைப் படிக்க தொடங்கி விட்டதாலும் கொஞ்சம் தெளிவாக, பிணை மனுவில் ஆஜராக வேண்டாமென அந்தப் பொய்யனுக்கு சொல்லி விட்டாள். ஆகையால், அந்த மனு தள்ளுபடியாகி விட்டது.
நமக்கு பிணை கிடைத்தால் போதாதா என்று எண்ணாமல், இப்படியெல்லாம் முடிவெடுப்பதற்கு மிகுந்த தன்னம்பிக்கை மிகமிக முக்கியம்.
இந்த நிலையில்தான், அந்த கடிதங்கள் இரண்டையும் உடனே வழக்காக பதிவு செய்வதாகவும், 24-10-2019 அன்று, அதன் மீது வாதாடுவதற்கு வர முடியுமா? என்று அந்த பெஞ்ச் கிளர்க் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு கேட்கிறாள்.
அடடே... இப்படி எல்லாங்கூட, அரசூழியர்கள் பொறுப்பா போன் போட்டு கேட்பாய்ங்களா என தவறாக நினைத்து விடாதீர்கள்.
நம் வரிப்பணத்தில் வாங்கும் கூலிக்காக மாரடிக்கும் அய்யோக்கிய அரசூழியர்கள், எவரும் நம் குடியே முழுகினாலும் கவலைப்பட மாட்டார்கள். ஆனால், உங்களால் தன் குடி முழுகி விடும் நிலை வந்தால், போனில் என்ன, நேரிலேயே வீடு தேடிவந்து காலில் கூட விழுந்து விடுவார்கள்.
சரி நம்ம விட்ட விசயத்துக்கு வருவோம்.
அதனை வாங்கி இருபது நாட்கள் ஆகிவிட்ட நிலையிலும், பொய்யன் ஆஜராகாமல் பிணை மனு தள்ளுபடியாகி ஆறு நாட்கள் ஆகி விட்ட நிலையிலும், ‘‘அதே நீதிமன்ற வளாகத்தில் உள்ள தலைமை குற்றவியல் நடுவரிடம் மனு கொடுத்த சில மணி நேரங்களில், கடிதத்தையே மனுவாக பதிவு செய்கிறோம்’’ என அழைத்தது எல்லாம் எதார்த்தமாக நடந்தது என எப்படி நினைக்க முடியும்?
அப்படி எதார்த்தமாக நடந்திருந்தால், ஏற்கெனவே திருப்பிய மனுவை, அவர்களே விசாரணைக்கு எடுக்க முடியாது. நான் வக்கீழை திருப்பப் பெற்று விட்டேன். ஆகையால், எனது கடிதத்தையே மனுவாக ஏற்றுக் கொள்ளுங்கள் என இவள் எழுதிக் கொடுக்க வேண்டும். அவள் அழைத்தபடி இவள் போயிருந்தால், எழுதி வாங்கிக் கொண்டு இருப்பார்கள்.
இவை எல்லாமே, எல்லா நிதிபதிகளுக்குள் நடக்கும் கூட்டுக்களவாணித்தனங்களே என்பதை மறந்து விடக்கூடாது என்று நாங்கள் சொன்னால், நிதிபதிகள் மீது இருக்கிற விருப்பு வெறுப்பு அல்ல அல்ல வெறுப்பினால் அப்படி சொல்கிறீர்கள் என நீங்கள் நினைத்தால், அப்படியில்லை என்பதை சட்ட விதிகளின்படி தெளிவுபடுத்த வேண்டியது எங்களின் கடமையே!
ஆமாம், இதனை தெளிவுப்படுத்த, இந்தவொரு சட்ட சங்கதியே போதும்.
அதாவது, குற்ற விசாரணை முறை விதிகள் 1973 இன் விதி 193 இன்படி, கீழ்நிலை நடுவர் நீதிமன்றங்களில் இருந்து, குற்றத்தின் தீவிர தன்மைக்கு ஏற்ப அனுப்பப்படும் வழக்கை மட்டுமே அமர்வு நீதிமன்றங்கள் விசாரிக்க முடியும். அப்படி செய்ய முடியும் என்றால், நாங்களே சொல்லி இருப்போமே!
இதில், ஒரேயொரு விதிவிலக்காக விதி 199 இன் கீழான, அவதூறு வழக்குகளை மட்டுமே, அமர்வு நீதிமன்றங்கள் நேரடியாக விசாரணை செய்ய முடியும்.
அப்படியானால், அழைத்ததற்கு காரணம்? வேறென்ன நிதிபதிகளின் சட்ட அறிவின்மை மற்றும் கேடுகெட்ட உள்நோக்கங்களே!
ஆமாம், எந்த ஓர் அரசூழிய அடிமையின், சட்ட விரோத செயல்களுக்கும், நாம் சட்டப்படியே செயல்பட்டு பதிலடி கொடுக்க முடியும். இப்படி நாம் நடக்க ஆரம்பித்தால், அதில் சட்ட விரோதமாக செயல்பட்ட அரசூழியர்களே சிக்கி சின்னாப்பின்னமாகி வேலை போய்விடும், பின் சோத்துக்கு பிச்சைதான் எடுக்கனும்.
ஆகையால், இதிலிருந்தெல்லாம் தப்பிப்பதற்காக, அவர்களைப் போலவே, நம்மையும் சட்ட விரோதமாக நடக்க ஆசையைத் தூண்டுவார்கள். அதற்கு நாம் ஆசைப்பட்டு நமக்கு காரியமானால், போதும் என நினைத்து, இதற்கு பலரும் உடன்பட்டு விடுவதால்தான், அவ்வூழியர்கள் அடுத்தடுத்தும் அதே தவறுகளை செய்துக் கொண்டே இருக்கிறார்கள்.
மேலும், நமக்கு காரியமானால், போதுமென்று அவ்வூழியர்கள் இழுக்கும் சட்ட விரோத வழிக்கு சென்று விட்டால், அதுவரை நீங்கள் மேற்கொண்ட சட்டப்படியான செயல்பாடுகளை எல்லாம் செயலிழக்க வைத்து விடும் என்பதால், அவர்கள் செய்த தவறுகளில் இருந்து எளிதில் தப்பித்து விடவே தவறான வழிகளில் உங்களது ஆசையை தூண்டுகிறார்களே ஒழிய, உங்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற அக்கறையால் அல்ல என்பதை, இனி ஒருபோதும் மறந்து விடாதீர்கள்.
மேலும், எங்களைப் போல, நீங்களும் காரியவாதிகள்தான் என்று கேவலமாக, கேவலமான ஊழியர்களால் எண்ணப்படுவீர்கள். ஆகையால், நியாயமாக உள்ள நீங்கள் பணிந்து விடாமல், அவர்களை சட்டப்படியே பணியாற்ற வைத்து பணிய வையுங்கள். இதற்கு நம்முடைய சட்ட விழிப்பறிவுணர்வு நூல்கள் நல்லதொரு வழியை காட்டும்.
இப்படி சட்ட விரோதமாக கடிதத்தையே வழக்கை விசாரிக்கிறேன் என்று சொல்லி, பின் முன்னுக்குப் பின் முரணாக காரணங்களை கூடி கடிதத்தை திருப்பி அனுப்பியுள்ள முதன்மை நிதிபதி அலப்பரை அ(ல்)லியைப் பற்றி, ஏற்கெனவே நம் நூல்களில் நிறைய எழுதப்பட்டு உள்ளது. மேலும், ஒரு நூலை எழுதும் அளவிற்கு மிகவும் ருசிகரமான செய்திகள் இருக்கின்றன. இப்படியெல்லாம் செய்தால், நாம் எழுதுவதை தடுத்து விடலாம் என்ற எண்ணமும் இருந்திருக்கலாம்.
அதுக்கெல்லாம், உன்னைப் போன்று தீர்ப்புகளை திரித்தும், திருத்தியும், புளுகு மூட்டை நிதிபதிகளைப் போன்ற வேற ஆளைப் பாரு! நாங்கள் எழுதுவது எழுதுவதுதான், என்பதற்கு அடித்தளமே இதுதான்!!
பின் குறிப்பு: இந்தப் பகுதியை அனுபவத்தின் அடிப்படையில் உணர்ந்து எழுதி முடித்து, ஒலியொளி அமைத்துக் கொண்டிருந்த போது, எங்களைப் பற்றி நீங்கள் சொல்வதெல்லாமே உண்மைதான்! என்பதற்கான ஆதாரங்களை உங்களுக்கு அனுப்பி உள்ளேன் என்று சொல்லாமல் சொல்லும் நிதிபதி அல்லப்பரை அ(ல்)லியின் பதிவு அஞ்சல் கடிதம் கிடைத்தது.
இதனை இதோடு சேர்த்தால், சிரமப்பட்டு செய்த வேலைகளை எல்லாம் திருத்தி, திரும்ப செய்ய வேண்டி இருக்கும். இன்று வெளியிட முடியாமல் போய் விடும்.
மேலும், இது நாம் ஓரிரு தினங்களுக்கு முன்பு கணித்து சொன்ன, அ(ல்)லியின் மனதில் குரலை (மைண்ட் வாய்ஸ்) ஆமோதிப்பதாக இருப்பதால், அதோடு சேர்த்து, ஒரு பதிவாக வெளியிடலாம் என உள்ளோம்.
(சா, கா)ட்சி - 3 சொல்லிய வண்ணம் செயல் சாதனை!
இதன் மூலம், இவளைப் போல நம் பிரச்சினை நமக்கு அடுத்தாக, நம் குடும்ப உறுப்பினர்களுக்கே நன்கு தெரியும் என்ற அடிப்படையில், நம் குடும்ப உறுப்பினருக்காக, குடும்பத்தினரும் வாதாட முடியும் என்று நாம் சொல்லும் உண்மையும் வெளிவந்து விட்டது.
இதையெல்லாம், இவளுக்கு எடுத்துச் சொன்னதாலும், அவளுக்கு அவள் மீதும், நம் சட்ட நடவடிக்கைகள் மீதும் இருந்த அசைக்க முடியாத நம்பிக்கையும், ஓரளவிற்கு புரிந்துக் கொள்ளும் திறனும் இருந்ததாலும் நம் நிலைப்பாட்டில் தெளிவாக நின்று சாதித்து விட்டாள். ஆமாம்,
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல் - குறள் 664
என்று நம் வள்ளுவப்பாட்டன் சொல்லி வழிகாட்டு நெறியில், நாம் சொன்னபடி நின்றதால், இன்று பல பெருமைகளை தேடிக் கொண்டு விட்டாள்.
ஆஹா... ஆஹா... ஆனால், எங்களுக்குத்தான் அந்த கண்கொள்ளா காட்சியைக் காண கொடுத்து வைக்கல! வாழ்த்துக்களோடு வழியனுப்பி வைக்கிறோம்!!
இவள் அப்படி பார்க்கும் கண்கொள்ளா காட்சியை பார்ப்பதற்கு என்றே, இவளுக்கு ஒரு திடீர் ரசிகர் கூட்டம் உருவாகி விட்டது. ஆகையால், அவர்களும் நாளை 24-10-2019 அன்று நீதிமன்றத்துக்கு செல்கிறார்கள்.
இப்படியெல்லாம் தமிழ்நாட்டில் நடக்கும், சட்ட சாதனைகள் வரலாறுகளாக மாறி உலகத்திற்கே வழி காட்டப் போகிறது.
நம்ம முட்டாள் நிதிபதி சி. சசிக்குமாருக்கு நாம் கற்பிக்கிற இந்த அனுபவ பாடம், அனைத்துலக முட்டாள் நிதிபதிகளுக்கும் பாலபாடமாக இருக்கனும்.
மக்களின் நலனுக்காக இதனை நூலாக தொகுத்து வெளியிடும் எண்ணமும் இருக்கிறது.
(சா, கா)ட்சி - 4 நாளை என்ன நடக்கும்?
இவள் கொடுத்துள்ள இரண்டு மனுக்களின் படியும், கணவனைப் போலவே இவளையும் சிறையில் அடைக்க வேண்டும்.
பிணையில் விடு என்று கேட்ட போதெல்லாம் விட முடியாது என்று சொல்லி அதிகாரத் திமிரில் சிறையில் அடைத்த முட்டாள் நிதிபதி,
‘‘நாளை சிறையில் வை என்று சொல்லிக் கொடுத்துள்ள மனுவின்படி, இதுவரை நான் சிக்கி சின்னாப் பின்னமானதே போதும், பிணையில் விடுகிறேன்’’ என்று சொல்ல வேண்டும்.
இப்படி பிணையில் விட்டால்,
‘‘எங்களின் அறிவார்ந்த மனுக்களால், முட்டாளாக இருந்த நிதிபதிக்கு அறிவு வந்து பிணையில் விடுவதால், பிணையில் செல்ல சம்மதிக்கிறோம்’’ என எழுதி கையொப்பம் இட்டு மீண்டும் மூக்கை உடைப்பேன் என சொல்லி இருக்கிறாள் !
என்னதான் நடக்கிறது என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
இதுகுறித்த விளக்க
காணொளியை இந்த இணைப்பில் யூடியூபிலும் காணலாம்