இதற்கு முன்பாக இயற்கை சீற்றங்களின் போது இருக்க வேண்டிய புத்திசாலித்தனம் என்ன? என்று கட்டுரையை எழுதி உள்ளோம்.
இப்படி இயற்கை சீற்றத்தால் பாதிக்கப் படுபவர்களுக்கு ஏதாவது உதவ வேண்டுமே என்ற எண்ணம் மனதில் ஓடிக் கொண்டிருந்த நிலையில், சில ஆர்வலர்கள் நிதி கொடுக்க நம்பிக்கையானவர்களை பரிந்துரைக்க கோரினார்கள்.
ஆகையால், நாமே களமிறங்கி செய்தால்தான் உருப்படியாக எதையாவது செய்து தரமுடியும் என்று எண்ணி நம் வாசகர்கள் உள்ளிட்ட ஆர்வலர்களிடம் இருந்து நிதியுதவி பெற்று, அதனை கொண்டு குடிசை வாழ் மக்களுக்கு இயன்ற நிதியை பகிர்ந்தளிப்பது என்ற முடிவோடு இப்படியொரு பதிவை 21-11-2018 அன்று காலை முகநூல், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தோம்.
கேர் சொசைட்டியின் (CARE Society - Hosur) அறிவிப்பு...
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவிட, நம்பிக்கையானவர்கள் யாரும் உள்ளார்களா என வாசகர்கள் சிலர் கேட்கிறார்கள்.
ஆகையால், அங்கு கொஞ்சம் நிலைமை சீரான பின்பு நாங்களே செய்ய முடிவு எடுத்துள்ளோம்.
அதாவது நேரடியாக சென்று, வசதியற்றவர்களை கண்டறிந்து இயன்ற சிறு சிறு நிதியை கொடுப்பது என்பதே அது. பொருட்களாக கொண்டு சென்று வழங்குவதை விட, இப்படி நிதியாக கொடுக்கும்போது, அவர்களது தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறோம்.
எனவே, விருப்பம் உள்ளவர்கள் 9842909190 என்ற வாட்ஸ்அப் அல்லது டெலிகிராம் எண்ணில் தகவல் சொல்லலாம். கேர் சொசைட்டியின் பங்களிப்பாக முதற்கட்டமாக சுமார் 20, 000 (இருபதாயிரம் மட்டும்) ஒதுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
கஜா புயலுக்கான நிதியுதவி (gaja cyclone donation) என்பதை மறக்காமல் குறிப்பிட்டு நன்கொடையை செலுத்த வேண்டிய வங்கிக் கணக்கு எண்...
Account Name : CARE Society
Account Number : 768307417
Account Type : Saving Bank Account
IFSC code : IDIB000H011
Bank Name : Indian Bank, Hosur – 635109
நன்கொடை செலுத்தியப் பின் அதுகுறித்த தகவலை 9842909190 என்ற வாட்ஸ்அப் எண்ணில் முகவரியுடன் தெரிவித்தால், நன்கொடைக்கான உ(ய)ரிய இரசீது அனுப்பி வைக்கப்படும்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து நீதியைத்தேடி... வாசகர்கள் உள்ளிட்ட ஆர்வலர்கள் பலர் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, கட்டுமானத்தில் நல்லதொரு அனுபவம் உள்ள அன்பர் திரு. பிரபு அடுத்தடுத்து மழை மற்றும் புயல் இருப்பதால், அவை முடிவுற்றதும் உருப்படியாக ஏழை மக்களுக்கு அவர்கள் சேகரித்து தரும் பொருளை வைத்து, (பயலால் விழுந்துள்ள மரங்கள், தென்னை மட்டைகள் உள்ளிட்டவற்றை) கூலி வாங்காமல் நம் உழைப்பில் வீடு கட்டி கொடுக்கலாம் என்ற ஆலோசனையை முன் வைத்துள்ளார். இதனை வரவேற்று ஏற்றுக் கொண்டுள்ளோம்.
இவரது கட்டுமான முயற்சி எந்த அளவிற்கு ஆரோக்கியமானது என்று நமக்கான வீட்டை நாமே திட்டமிட்டு கட்டலாம் என்ற கட்டுரையில் எழுதி உள்ளோம்.
ஏனெனில், சாதாரணமாகவே கூலியை அதிகமாக கேட்பவர்கள், இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் இரண்டு மடங்காக கேட்பார்கள். அவர்களுக்கும் அதிகப் பணம் தேவைப்படுமே!
ஆகையால் அரசு தரும் நிவாரண நிதிகள் கட்டுமான கூலிக்கே செலவாகி விடும் என்பதோடு வேலை செய்ய தேவையான ஆட்கள் கிடைப்பதும் கடினம் அல்லவா?
ஆகையால், இந்த முடிவே வீட்டை இழந்த மக்களுக்கு நல்லதொரு பயனை அளிக்கும் என எண்ணி உள்ளோம். எனவே, இதற்கான கட்டுமான களப்பணியில் இறங்க தற்போது பத்து பேர் தயாராக உள்ளோம். கூடுதலாக நாற்பது நபர்கள் வரை தேவை.
இவர்கள் வெல்டிங், எலக்ட்ரிக்கல் ஓயரிங், கட்டுமானம், கீற்று முடைதல் மற்றும் கட்டுதல் போன்றவற்றில் ஈடுபடுபவர்களாக இருந்தால் சிறப்பு. எடுபிடி வேலைகளுக்கு அந்தந்த வீட்டு ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளையே பயன்படுத்திக் கொள்ள எண்ணி உள்ளோம்.
இவை அனைத்தையும் மழை, புயல் எல்லாம் ஓய்ந்த பிறகே சரியாக செய்ய முடியும். எனவே, இதற்கு தக்கவாறு நிவாரணப் பணியில் ஈடுபட விரும்புபவர்கள் தனிநபராக அல்லது குழுவாக இருந்தாலும் சரி!
தங்களின் தொழில் சார்ந்த உங்களுக்கு பழக்கமான கையடக்கம் முதல் பையடக்கம் வரையிலான தொழிலுக்கு அத்தியாவசிய கருவிகளுடனும், தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் வேலை செய்வதற்கு ஏற்ற துணிமணிகளுடனும் பத்து முதல் பதினைந்து நாட்களை வரை தங்கும்படி வந்தால் போதும்.
இதற்கும் மேலான கருவிகள், வெல்டிங் மிஷின்கள் உள்ளிட்டவற்றை நாங்கள் ஏற்பாடு செய்து கொள்வோம்.
இதற்கும் மேலான கருவிகள், வெல்டிங் மிஷின்கள் உள்ளிட்டவற்றை நாங்கள் ஏற்பாடு செய்து கொள்வோம்.
உணவு, தங்குமிடம், பத்து மணி நேர ஓய்வு நேரம் ஆகியவை எந்தக் குறையும் இன்றி வழங்கப்படும்.
குறைந்தபட்ச இலக்காக ஐம்பது குடிசை மற்றும் ஓட்டு வீடுகளுக்கு மட்டுமே திட்டமிட்டு உள்ளோம். உங்களிடம் இருந்து கிடைக்கும் நல்ஆதரவைப் பொருத்து வீட்டின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், தங்கும் நாட்களின் எண்ணிக்கையும் அதிகரிப்போம்.
இதற்காக நிதி அல்லது இயன்ற பொருட்களை வழங்கிட விரும்புவோர் அது குறித்தும் தகவல் சொன்னால், அதனை சேர்க்க வேண்டிய களப்பணிக்கு அருகில் உள்ள இடத்தை சொல்லுவோம்.
இவை அனைத்துக்குமான ஒரே வாட்ஸ்அப் அல்லது டெலிகிராம் எண் 9842909190 மட்டுமே. பங்களிப்பு நிதியை செலுத்த வேண்டியது மேற்சொன்ன கேர் சொசைட்டியின் வங்கிக் கணக்கு மட்டுமே!
நாங்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ள காரணத்தால், அழைப்பை தவிர்க்கவும். வாட்ஸ்அப் அல்லது டெலிகிராம் வழியில் மட்டும் தகவல் சொல்லவும்.
உலகத்திற்கே தங்களின் அயராத உழைப்பால் உணவளித்துக் கொண்டிருக்கும் விவசாயிகளின் துயரை துடைக்க, நாம் எண்ணிய செயலை எண்ணியபடி முடிக்க உங்களால் இயன்ற ஆதரவை தருக; உங்களுக்கு தெரிந்த அன்பர்களின் ஆதரவையும் பெற்றுத் தருக!!
முக்கிய குறிப்புகள்: குழுவாக வர விரும்புபவர்கள் தங்களுக்கே உண்டான பிரத்தியேக உடைகளை (யூனிபார்ம்) கட்டாயம் தவிர்க்க வேண்டும். மற்ற விளம்பரங்களையும் தவிர்க்க வேண்டும்.
ஆமாம், பல்வேறு பிரச்சினைகளை தடுக்க அந்த இடத்திற்கு நாம் போனதோ, உதவி செய்ததோ, வந்ததோ தெரியாத வகையில் நடந்து கொள்ள வேண்டும்.
உடல் பலகீனம், தினசரி மருந்து மாத்திரைகளை உட்கொள்பவர்கள் உதவிக்கு வருவதை கட்டாயமாக தவிர்க்கவும். வயதுக்கு தடையில்லை.
உதவிக்கு வருபவர்கள் தங்களின் தொடர் வேலை வாய்ப்புகளை விட்டு விட்டோ அல்லது தங்களுக்கு கிடைக்கும் கூலியை விட்டு விட்டோ வரவேண்டாம். பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் உள்ளோர் மட்டும் வரவும்.
தொடர்ந்து பத்துப் பதினைந்து நாட்களுக்கு இருக்க இயலாது என்பவர்கள் தனக்கான மாற்று அன்பர்களை ஏற்பாடு செய்துக் கொண்டு செயலை முடிக்க திட்டமிடலாம்.
உதவிக்கு வருபவர்கள் தங்களின் தொடர் வேலை வாய்ப்புகளை விட்டு விட்டோ அல்லது தங்களுக்கு கிடைக்கும் கூலியை விட்டு விட்டோ வரவேண்டாம். பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் உள்ளோர் மட்டும் வரவும்.
தொடர்ந்து பத்துப் பதினைந்து நாட்களுக்கு இருக்க இயலாது என்பவர்கள் தனக்கான மாற்று அன்பர்களை ஏற்பாடு செய்துக் கொண்டு செயலை முடிக்க திட்டமிடலாம்.
இதில், அவ்வப்போது தேவைக்கு ஏற்ப திருத்தங்கள் செய்யப்படும்.
பிற்சேர்க்கை: 23-11-2018
விரைவில் நிவாரணப் பணி தொடங்கும்!
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நம்மால் இயன்ற நிவாரணப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டு இருந்ததை இந்தக் கட்டுரையில் படித்து அறியலாம்.
நாம் திட்டமிட்டபடி, பரவலாக மழை ஓய்ந்துள்ளதாலும், இதே நிலை நீடித்தாலும் எதிர்வரும் திங்கள் 26-11-2018 அன்று நேரடியாக சென்று எந்த இடத்தில் நம் களப்பணியை செய்யலாம், மக்களுக்கு எந்த மாதிரியான நிவாரணப் பணிகளை செய்ய வேண்டி உள்ளது என்பதை எல்லாம் ஆராய்ந்து முடிவு செய்து அறிவிக்க உள்ளோம்.
மேலும், நிவாரணப் பணிக்கு வருபவர்களுக்கான தங்குமிட வசதி உள்ளிட்டவற்றையும் ஏற்பாடு செய்து விட்டு சில நாட்களில், திட்டமிட்டபடி நம் வேலையை தொடங்க உள்ளோம்.
எனவே, இதற்கான உதவிகளை செய்ய நினைப்பவர்கள் விரைந்து செய்திடுமாறு அன்புடன் கோருகிறோம். நன்றி!
பிற்சேர்க்கை: 25-11-2018
திட்டமிட்டபடி நாளை தொடங்குகிறோம்!
ஏற்கெனவே திட்டமிட்டபடி, கஜா புயலில் சேதமடைந்த கட்டுமானப் பணியை எங்கு மேற்கொள்வது என்பது குறித்து ஆய்வு செய்வதற்கான நான்கு பேர் கொண்ட நம் குழு நாளை புறப்படுகிறது.
இக்குழு இரண்டு நாட்கள் சர்வே எடுத்து எங்கு கட்டுமானப் பணியை தீர்மானிப்பது என முடிவெடுத்து, அப்பகுதி மக்களுக்கு அறிவிக்கும்.
பின் சில நாட்கள் கழித்து, ஆர்வலர்களுக்கான உணவு, உறைவிடம் ஆகியவற்றை தயார் செய்துக் கொண்டு கட்டுமானப் பணியை தொடங்கும்.
அரசின் நிதியுதவி மக்களுக்கும் கிடைக்க வேண்டும். அது கிடைத்தால் அவர்களும் தேவைக்கு ஏற்ப கட்டுமானத்துக்கு தேவையான மூலப் பொருட்களை வாங்க முடியும்.
பொருளுதவி அல்லது நிதியுதவி என்றால், பெரிய அளவில்தான் செய்ய வேண்டும் என்றும், அது நம்மால் முடியாத காரியம் என்றே பலரும் நினைக்கிறார்கள்.
காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது. (குறள் - 102)
உதவி எவ்வளவு சிறிதாக இருந்தாலும், அது செய்யப்படும் காலத்தால் அதுதான் மிகப்பெரியது என்(கி)றார், வள்ளுவர். எனவே, உங்களுக்கு கிடைத்த இதுபோன்ற எந்தவொரு நல்வாய்ப்பையும் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.
நாம் மேற்கொள்ளும் இப்பணி மிகச்சிறப்பாக நடைபெற வேண்டுமென்று வேண்டி, இக்களப் பணியில் ஈடுபட உள்ளோரையும், ஏற்கெனவே ஈடுபட்டுக் கொண்டு உள்ளோரையும் வாழ்த்துங்கள்!
பிற்கேர்க்கை 28-11-2018
கஜாவில் நம் கள ஆய்வும், அடுத்தக் களப்பணியும்!
திட்டமிட்டபடி 26-11-2018 அன்று திருத்துறைப்பூண்டிக்கு அடுத்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் புறப்பகுதியாக உள்ள உம்பளச்சேரி மற்றும் கீழ உம்பளச்சேரி ஆகிய பகுதிகளில் நம் குழு பாதிக்கப்பட்ட மக்களை சந்திந்து ஆய்வு செய்தது. இந்தப் பகுதியில் சுமார் 750 வீடுகள் இருப்பதாக தகவல் தெரிவித்தனர்.
இதுபற்றிய நம் தொகுப்பு காணொலியை காண விரும்பினால், இங்கு சொடுக்கி காணலாம். இது போலவே நம் நிவாரண களப்பணி முடிந்ததும், அதுகுறித்த காணொலியும் பதிவேற்றப்படும்.
அதில், கனத்தப் புயல் காரணமாக தென்னை ஓலைகள் எல்லாம் பாழாகி விட்டதால், கீற்றுகள் கிடையாது. இதுபோலவே ஓடுகளும் கிடையாது. ஆகையால், நம்முடைய கட்டுமான திட்டம் தற்போதைக்கு சாத்தியம் இல்லை என்பது புரிந்தது. இவை சாத்தியமாக வருடங்களும் ஆகலாம்.
எனவே இப்போது அப்பகுதி மக்களுக்கு உள்ள ஒரே வழி, தார்ப்பாயை கொண்டு வீட்டை அமைத்துக் கொள்வது மட்டுமே. ஆகையால், தார்ப்பாய், படுக்க பாய், போர்வை, சோலாரில் எரியக்கூடிய விளக்கு ஆகியவற்றோடு இயன்றால் உணவுப் பொருட்களில் பருப்பையும் எண்ணையும் தர கோரினார்கள்.
இதுவே, எந்தவொரு புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்தவர்களுக்கும் இவையே தற்போது தேவையான நிவாரணமாக இருக்கும் என்பதால், நிவாரண உதவியில் ஈடுபடுகிறவர்கள் இதனை முக்கியமாக கவனத்தில் கொள்ளவும்.
அவர்களிடம் முடிந்த வரையில் உதவி செய்ய முயல்கிறோம் என உறுதி அளித்துள்ளோம். அதன் பிறகு அரசு தார்ப்பாய் வழங்குவதாக தெரிய வந்துள்ளது. எனவே, மற்றதில் முடிந்ததை நாம் வழங்கினால் போதும்.
இந்த அடிப்படையில் ஒரு வீட்டுக்கு தரமான பெரிய படுக்கை கோரைப் பாய் ஒன்று (150), இரண்டு போர்வைகள் (100), சோலார் விளக்கு (150), துவரம் பருப்பு இரண்டு கிலோ (130 - 140), பாமாயில் எண்ணை ஒரு கிலோ (68) என அங்குள்ள 750 வீட்டுகளுக்கும் வழங்கலாம் என முடிவு செய்துள்ளோம்.
ஆமாம், கடந்த இரண்டு நாளாக நாங்கள் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளின் பயனாகவே இந்த விலைக்கு கிடைக்க இருக்கிறது. உங்களுக்கு தெரிந்து இதை விட குறைவாக கிடைக்கும் என்றால், தாராளமாக எங்களுக்கு தெரியப் படுத்துங்கள். இந்த நோக்கத்திற்காகவே இத்தோராய விலையை குறிப்பிட்டு உள்ளோம்.
எனவே, உங்களுக்கு தெரிந்தால் நம்முடைய 9842909190 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தகவல் சொல்லவும்.
இதற்காக ஒரு குடும்பத்திற்கு குறைந்தபட்சம் 600 வரை செலவாகும். இதுவும் கூட, கஜாவுக்கு உதவி செய்யும் நோக்கத்தோடு பொருட்களை கொடுக்க விரும்பும் அன்பர்களின் அன்பால் மட்டுமே. கொண்டு சேர்க்கும் செலவு கூடுதலாகும்.
எனவே, இதில் உங்களால் எத்தனை வீட்டிற்கு உதவ முடியும் என்பதை கணக்கிட்டு நிதியுதவி அல்லது மேற்சொன்ன பொருளுதவியை வழங்கலாம்.
மிக முக்கியமாக ஏற்கெனவே சிறு சிறு பங்களிப்பு தொகையை வழங்கியவர்கள் ஒரு வீட்டிற்கு கூட உதவவில்லையே என கருத வேண்டாம். இனி இப்படியே உதவ முன்வருபவர்களுங்கூட கருத வேண்டாம்.
நாம் வழங்க நினைக்கும் இப்பொருளுதவிகளை அதிகபட்சம் ஒரு வாரத்திற்குள் வழங்கிட இருப்பதால், உங்களால் முடிந்த உதவியை 02-12-2018 அன்று நள்ளிரவுக்குள் செய்திடுங்கள்.
அப்போதுதான் அடுத்தநாள் நமக்கு வந்துள்ள நன்கொடைக்கு எத்தனை குடும்பத்திற்கு வாங்க, வழங்க முடியும் என்பதை எல்லாம் கணக்கிட்டு வாங்கிடவும், வழங்கிடவும் ஏதுவாக இருக்கும். அவ்வளவே!
பிற்சேர்க்கை நாள் 05-12-2018
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்மால் இயன்ற நிவாரண உதவிகளுக்காக நிதி திரட்டும் பணி கடந்த 02-12-2018 அன்றோடு முடிவடைந்தது.
இதற்கு கேர் சொசைட்டியின் பங்களிப்புத் தொகை ரூபாய் 20, 000 ஐ சேர்த்து மொத்தமாக 1, 09, 938. 00 (ஒரு இலட்சத்து ஒன்பதாயிரத்து, தொள்ளாயிரத்து முப்பத்தி எட்டு ரூபாய்) வசூல் ஆகியுள்ளது.
நம்மோடு இணைந்து பணியாற்ற உள்ள ஜீவாதார் மற்றும் ஆரோக்கியான் சார்பாக 1, 20, 000. 00 (ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபாய்) வசூல் ஆகியுள்ளது.
இதில் சமூக பொறுப்புணர்வோடு பங்களிப்பு தொகை செலுத்திய அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
முன்பு திட்டமிட்டபடி, இந்த நிதியைக் கொண்டு குறைந்தது சுமார் நாநூறு குடும்பங்களுக்கு உதவிட முடியும். இந்த உதவியை செய்ய இன்று 05-12-2018 அன்று திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்காக வாங்க உள்ள பொருட்களுக்கு முன்பணமும் செலுத்தப்பட்டு விட்டது.
ஆனால், மீண்டும் மழை குறுக்கிட்டு உள்ளதாலும், படத்தில் உள்ளபடி எதிர்வரும் 08-12-2018 வரை மழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதாலும், நம் கொண்டு சென்று வழங்க உள்ள நிவாரணப் பொருட்களை, எந்தவித சேதாரமும் இன்றி சேர்க்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருப்பதாலும் அடுத்த வாரமே நம் பயணத்தை தொடங்க முடியும் என எண்ணுகிறோம்.
இந்நிவாரண உதவிகளை வழங்கியதும், அதுபற்றிய முழு தகவல்களையும் தெரியப்படுத்துகிறோம்.
பிற்சேர்க்கை: 23-11-2018
விரைவில் நிவாரணப் பணி தொடங்கும்!
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நம்மால் இயன்ற நிவாரணப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டு இருந்ததை இந்தக் கட்டுரையில் படித்து அறியலாம்.
நாம் திட்டமிட்டபடி, பரவலாக மழை ஓய்ந்துள்ளதாலும், இதே நிலை நீடித்தாலும் எதிர்வரும் திங்கள் 26-11-2018 அன்று நேரடியாக சென்று எந்த இடத்தில் நம் களப்பணியை செய்யலாம், மக்களுக்கு எந்த மாதிரியான நிவாரணப் பணிகளை செய்ய வேண்டி உள்ளது என்பதை எல்லாம் ஆராய்ந்து முடிவு செய்து அறிவிக்க உள்ளோம்.
மேலும், நிவாரணப் பணிக்கு வருபவர்களுக்கான தங்குமிட வசதி உள்ளிட்டவற்றையும் ஏற்பாடு செய்து விட்டு சில நாட்களில், திட்டமிட்டபடி நம் வேலையை தொடங்க உள்ளோம்.
எனவே, இதற்கான உதவிகளை செய்ய நினைப்பவர்கள் விரைந்து செய்திடுமாறு அன்புடன் கோருகிறோம். நன்றி!
பிற்சேர்க்கை: 25-11-2018
திட்டமிட்டபடி நாளை தொடங்குகிறோம்!
ஏற்கெனவே திட்டமிட்டபடி, கஜா புயலில் சேதமடைந்த கட்டுமானப் பணியை எங்கு மேற்கொள்வது என்பது குறித்து ஆய்வு செய்வதற்கான நான்கு பேர் கொண்ட நம் குழு நாளை புறப்படுகிறது.
இக்குழு இரண்டு நாட்கள் சர்வே எடுத்து எங்கு கட்டுமானப் பணியை தீர்மானிப்பது என முடிவெடுத்து, அப்பகுதி மக்களுக்கு அறிவிக்கும்.
பின் சில நாட்கள் கழித்து, ஆர்வலர்களுக்கான உணவு, உறைவிடம் ஆகியவற்றை தயார் செய்துக் கொண்டு கட்டுமானப் பணியை தொடங்கும்.
அரசின் நிதியுதவி மக்களுக்கும் கிடைக்க வேண்டும். அது கிடைத்தால் அவர்களும் தேவைக்கு ஏற்ப கட்டுமானத்துக்கு தேவையான மூலப் பொருட்களை வாங்க முடியும்.
பொருளுதவி அல்லது நிதியுதவி என்றால், பெரிய அளவில்தான் செய்ய வேண்டும் என்றும், அது நம்மால் முடியாத காரியம் என்றே பலரும் நினைக்கிறார்கள்.
காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது. (குறள் - 102)
உதவி எவ்வளவு சிறிதாக இருந்தாலும், அது செய்யப்படும் காலத்தால் அதுதான் மிகப்பெரியது என்(கி)றார், வள்ளுவர். எனவே, உங்களுக்கு கிடைத்த இதுபோன்ற எந்தவொரு நல்வாய்ப்பையும் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.
நாம் மேற்கொள்ளும் இப்பணி மிகச்சிறப்பாக நடைபெற வேண்டுமென்று வேண்டி, இக்களப் பணியில் ஈடுபட உள்ளோரையும், ஏற்கெனவே ஈடுபட்டுக் கொண்டு உள்ளோரையும் வாழ்த்துங்கள்!
பிற்கேர்க்கை 28-11-2018
கஜாவில் நம் கள ஆய்வும், அடுத்தக் களப்பணியும்!
திட்டமிட்டபடி 26-11-2018 அன்று திருத்துறைப்பூண்டிக்கு அடுத்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் புறப்பகுதியாக உள்ள உம்பளச்சேரி மற்றும் கீழ உம்பளச்சேரி ஆகிய பகுதிகளில் நம் குழு பாதிக்கப்பட்ட மக்களை சந்திந்து ஆய்வு செய்தது. இந்தப் பகுதியில் சுமார் 750 வீடுகள் இருப்பதாக தகவல் தெரிவித்தனர்.
இதுபற்றிய நம் தொகுப்பு காணொலியை காண விரும்பினால், இங்கு சொடுக்கி காணலாம். இது போலவே நம் நிவாரண களப்பணி முடிந்ததும், அதுகுறித்த காணொலியும் பதிவேற்றப்படும்.
அதில், கனத்தப் புயல் காரணமாக தென்னை ஓலைகள் எல்லாம் பாழாகி விட்டதால், கீற்றுகள் கிடையாது. இதுபோலவே ஓடுகளும் கிடையாது. ஆகையால், நம்முடைய கட்டுமான திட்டம் தற்போதைக்கு சாத்தியம் இல்லை என்பது புரிந்தது. இவை சாத்தியமாக வருடங்களும் ஆகலாம்.
எனவே இப்போது அப்பகுதி மக்களுக்கு உள்ள ஒரே வழி, தார்ப்பாயை கொண்டு வீட்டை அமைத்துக் கொள்வது மட்டுமே. ஆகையால், தார்ப்பாய், படுக்க பாய், போர்வை, சோலாரில் எரியக்கூடிய விளக்கு ஆகியவற்றோடு இயன்றால் உணவுப் பொருட்களில் பருப்பையும் எண்ணையும் தர கோரினார்கள்.
இதுவே, எந்தவொரு புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்தவர்களுக்கும் இவையே தற்போது தேவையான நிவாரணமாக இருக்கும் என்பதால், நிவாரண உதவியில் ஈடுபடுகிறவர்கள் இதனை முக்கியமாக கவனத்தில் கொள்ளவும்.
அவர்களிடம் முடிந்த வரையில் உதவி செய்ய முயல்கிறோம் என உறுதி அளித்துள்ளோம். அதன் பிறகு அரசு தார்ப்பாய் வழங்குவதாக தெரிய வந்துள்ளது. எனவே, மற்றதில் முடிந்ததை நாம் வழங்கினால் போதும்.
இந்த அடிப்படையில் ஒரு வீட்டுக்கு தரமான பெரிய படுக்கை கோரைப் பாய் ஒன்று (150), இரண்டு போர்வைகள் (100), சோலார் விளக்கு (150), துவரம் பருப்பு இரண்டு கிலோ (130 - 140), பாமாயில் எண்ணை ஒரு கிலோ (68) என அங்குள்ள 750 வீட்டுகளுக்கும் வழங்கலாம் என முடிவு செய்துள்ளோம்.
ஆமாம், கடந்த இரண்டு நாளாக நாங்கள் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளின் பயனாகவே இந்த விலைக்கு கிடைக்க இருக்கிறது. உங்களுக்கு தெரிந்து இதை விட குறைவாக கிடைக்கும் என்றால், தாராளமாக எங்களுக்கு தெரியப் படுத்துங்கள். இந்த நோக்கத்திற்காகவே இத்தோராய விலையை குறிப்பிட்டு உள்ளோம்.
எனவே, உங்களுக்கு தெரிந்தால் நம்முடைய 9842909190 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தகவல் சொல்லவும்.
இதற்காக ஒரு குடும்பத்திற்கு குறைந்தபட்சம் 600 வரை செலவாகும். இதுவும் கூட, கஜாவுக்கு உதவி செய்யும் நோக்கத்தோடு பொருட்களை கொடுக்க விரும்பும் அன்பர்களின் அன்பால் மட்டுமே. கொண்டு சேர்க்கும் செலவு கூடுதலாகும்.
எனவே, இதில் உங்களால் எத்தனை வீட்டிற்கு உதவ முடியும் என்பதை கணக்கிட்டு நிதியுதவி அல்லது மேற்சொன்ன பொருளுதவியை வழங்கலாம்.
மிக முக்கியமாக ஏற்கெனவே சிறு சிறு பங்களிப்பு தொகையை வழங்கியவர்கள் ஒரு வீட்டிற்கு கூட உதவவில்லையே என கருத வேண்டாம். இனி இப்படியே உதவ முன்வருபவர்களுங்கூட கருத வேண்டாம்.
நாம் வழங்க நினைக்கும் இப்பொருளுதவிகளை அதிகபட்சம் ஒரு வாரத்திற்குள் வழங்கிட இருப்பதால், உங்களால் முடிந்த உதவியை 02-12-2018 அன்று நள்ளிரவுக்குள் செய்திடுங்கள்.
அப்போதுதான் அடுத்தநாள் நமக்கு வந்துள்ள நன்கொடைக்கு எத்தனை குடும்பத்திற்கு வாங்க, வழங்க முடியும் என்பதை எல்லாம் கணக்கிட்டு வாங்கிடவும், வழங்கிடவும் ஏதுவாக இருக்கும். அவ்வளவே!
பிற்சேர்க்கை நாள் 05-12-2018
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்மால் இயன்ற நிவாரண உதவிகளுக்காக நிதி திரட்டும் பணி கடந்த 02-12-2018 அன்றோடு முடிவடைந்தது.
இதற்கு கேர் சொசைட்டியின் பங்களிப்புத் தொகை ரூபாய் 20, 000 ஐ சேர்த்து மொத்தமாக 1, 09, 938. 00 (ஒரு இலட்சத்து ஒன்பதாயிரத்து, தொள்ளாயிரத்து முப்பத்தி எட்டு ரூபாய்) வசூல் ஆகியுள்ளது.
நம்மோடு இணைந்து பணியாற்ற உள்ள ஜீவாதார் மற்றும் ஆரோக்கியான் சார்பாக 1, 20, 000. 00 (ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபாய்) வசூல் ஆகியுள்ளது.
இதில் சமூக பொறுப்புணர்வோடு பங்களிப்பு தொகை செலுத்திய அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
முன்பு திட்டமிட்டபடி, இந்த நிதியைக் கொண்டு குறைந்தது சுமார் நாநூறு குடும்பங்களுக்கு உதவிட முடியும். இந்த உதவியை செய்ய இன்று 05-12-2018 அன்று திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்காக வாங்க உள்ள பொருட்களுக்கு முன்பணமும் செலுத்தப்பட்டு விட்டது.
ஆனால், மீண்டும் மழை குறுக்கிட்டு உள்ளதாலும், படத்தில் உள்ளபடி எதிர்வரும் 08-12-2018 வரை மழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதாலும், நம் கொண்டு சென்று வழங்க உள்ள நிவாரணப் பொருட்களை, எந்தவித சேதாரமும் இன்றி சேர்க்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருப்பதாலும் அடுத்த வாரமே நம் பயணத்தை தொடங்க முடியும் என எண்ணுகிறோம்.
இந்நிவாரண உதவிகளை வழங்கியதும், அதுபற்றிய முழு தகவல்களையும் தெரியப்படுத்துகிறோம்.
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment