ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது இரண்டு ஆண்டுக்கு ஒருமுறையே இயற்கை சீற்றங்கள் நம்மையோ அல்லது நம்முடைய அண்டை மாவட்ட அல்லது மாநில மக்களையோ பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கி விடுகின்றன.
முதலில் இதுபோன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டால், ஏற்பட்டால் என்னென்ன துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அரசு திட்டம் தீட்டி ஓரளவுக்குத்தான் அதனை செயல்படுத்த முடியுமே அன்றி, முற்றிலுமாக இயற்கை சீற்றத்தை தடுக்கவோ அல்லது முழுமையான நிவாரணப் பணிகளை செய்து விடவோ முடியாது என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.
ஆகையால், உயிரிழப்புக்கள், பொருட் சேதம் உள்ளிட்டவைகளை தவிர்க்க முடியாது என்பதோடு, இந்த நிலைமை சீராக குறைந்தது ஒருசில மாதங்களாவது ஆகும் என்பது சுனாமி ஆழிப் பேரலை ஏற்பட்ட காலத்தில் இருந்து நாம் காணும் காட்சிகளாக இருந்து வருகிறது.
உயிரை காப்பாற்றிக் கொள்ள நினைப்பவர்கள் வேண்டுமானால், அசையும் சொத்துக்களான பணத்துடனும் சின்னஞ்சிறு பொருட்களுடனும் இடம் மாறி தப்பிக்கலாம். ஆனால், ஆடு, மாடு, கோழி போன்ற அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை அனைவராலும் காப்பாற்றி விடவே முடியாது.
ஆமாம், கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகானத்தில் பெரும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட போது, அங்குள்ள நம் வாசக சகோதரி ஒருத்திக்கு இப்படியொரு ஆலோசனையை சொன்னபோது, அதனை ஏற்று அப்படியே செய்தாள். ஆகையால், பாதிப்பில் இருந்து முழுவதும் தப்பினாள்.
இவள் மட்டுமல்ல; அங்குள்ள பெரும்பாலானோர் இப்படித்தான் இடம் பெயர்ந்தனர். இதனை அவர்கள் வழக்கமாகவே வைத்திருக்கிறார்கள். ஆகையால், பெரும் அளவிலான உயிர்சேதமும், பொருட் சேதமும் தடுக்கப்படுகின்றன. அரசும் நிவாணரப் பணிகளை மிகவும் துரிதமாக செய்து விட்டு, ஊர் விட்டு ஊர் போன மக்களை திரும்ப வரும்படி அழைக்க ஏதுவாக இருக்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
ஆனால், நம் நாட்டில் இதுபோன்ற தப்பிக்கும் வாய்ப்புகளை எல்லாம் யாரும் யோசிப்பது இல்லை. எடுத்துச் சொல்வதற்கும் ஆட்கள் இல்லை.
ஆமாம், கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகானத்தில் பெரும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட போது, அங்குள்ள நம் வாசக சகோதரி ஒருத்திக்கு இப்படியொரு ஆலோசனையை சொன்னபோது, அதனை ஏற்று அப்படியே செய்தாள். ஆகையால், பாதிப்பில் இருந்து முழுவதும் தப்பினாள்.
இவள் மட்டுமல்ல; அங்குள்ள பெரும்பாலானோர் இப்படித்தான் இடம் பெயர்ந்தனர். இதனை அவர்கள் வழக்கமாகவே வைத்திருக்கிறார்கள். ஆகையால், பெரும் அளவிலான உயிர்சேதமும், பொருட் சேதமும் தடுக்கப்படுகின்றன. அரசும் நிவாணரப் பணிகளை மிகவும் துரிதமாக செய்து விட்டு, ஊர் விட்டு ஊர் போன மக்களை திரும்ப வரும்படி அழைக்க ஏதுவாக இருக்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
ஆனால், நம் நாட்டில் இதுபோன்ற தப்பிக்கும் வாய்ப்புகளை எல்லாம் யாரும் யோசிப்பது இல்லை. எடுத்துச் சொல்வதற்கும் ஆட்கள் இல்லை.
ஆனால், இயற்கை சீற்றம் போன்ற இக்கட்டான சூழ்நிலையைப் பயன்படுத்தித்தான் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் எண்ணத்தோடு இருப்பவர்கள் தங்களின் கெட்ட உள்நோக்கங் கொண்ட அறிக்கைகளை விதம் விதமாக விடுகிறார்கள்; இனியும் விடுவார்கள்.
ஆனால், உண்மை என்னவென்றால், யார் ஆட்சியில் இருந்தாலும் இயற்கை சீற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உடனடி நிவாரணத்தை வழங்கிடவே முடியாது.
ஆமாம், இதனை நம் முப்பாட்டன் வள்ளுவன் வழியில் இரத்திணச் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால்,
அதிகாரம்: அரசியல்
எதிர்க்கட்சியாக இருக்கும்போது எதிர்ப்பவர்கள் ஆளுங் கட்சியாகும்போது அதையேதான் செய்வர்.
என்று துணிந்து சொல்லலாம். இதில் சந்தேகம் இருந்தால் ஆர அமர ஆராய்ந்து பாருங்கள்; உண்மை விளங்கும்.
எனவே, எக்காலத்திலும் எதிர்க்கட்சி அரசியல் வியாதிகளின் மோசடி வார்த்தைகளை நம்பி அவ்வப்போது நிவாரணப் பணிகளை பார்வையிட வரும் ஆளும் அரசியல் வியாதிகளுக்கு எதிராக போராடினாலோ அல்லது அவர்களை விரட்டி அடித்தாலோ அதனால் ஏற்படும் உடனடிப் பாதிப்பு அப்படிச் செய்யும் மக்களுக்குத் தானே அன்றி, நிச்சயமாக அவர்களுக்கு இல்லை என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.
ஏனெனில், மக்கள் எவ்வளவுதான் உதவ முன் வந்தாலும் நேரடியாக வந்து உதவுவது கடினம். அப்படி உதவ நினைத்தால், அவர்கள் மிகப் பெரும் இன்னல்களுக்கே ஆளாக நேரிடும். இதனை யார்தான் விரும்புவர்?
இந்நிலையில் தாங்கள் வழங்க நினைக்கும் பணமும் பொருளும் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போய் சேருமா என்ற சந்தேகத்திலேயே பலரும் உதவிக்கரம் நீட்டுபவர்களிடம் தருவதில்லை. உதவி செய்கிறேன் என்று சொல்பவர்கள் எல்லோருமே யோக்கியர்களும் அல்லர். இதுபோன்ற சூழ்நிலைகளைப் பயன்படுத்தி கொள்ளையடிப்பவர்களும் பலருண்டு என்பதற்கான வரலாறும் உண்டு.
இந்த நிலையில், அரசு மட்டுமே எந்த வகையிலும் ஓரளவிற்காவது உதவக்கூடிய வசதிகளை கொண்டுள்ளது என்பதை புரிந்துக் கொண்டு ஆளும் அரசியல் வியாதிகளை தங்களது பகுதிக்கு அழைக்க வேண்டுமே தவிர, வருபவர்களை விரட்டி அடிப்பதால், எந்தப் பயனுமில்லை என்பதை உணர்வதே புத்திசாலித்தனம்!
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment