தன்னுடைய வாட்ஸ்அப்பில் இப்படியொரு முகப்பு படத்தை வைத்துள்ள திருப்பூர் சரவணன் என்பவர் அனுப்பியுள்ள செய்தி.
ஐயா நான் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ஒரு மூட்டை தூக்கும் தொழிலாளி.
திரு. Warrant Ba-Law அவர்களின் நீதியைத்தேடி... பிணை (ஜாமீன்) எடுப்பது எப்படி? என்ற புக்கை திருப்பூர் நூலகம் சென்று படித்தேன்.
எதையும் எதார்த்தமாக எழுதுகிறார். அவர் எழுதுவது அனைத்தும் உண்மையாகவே இருக்கிறது. ஆகையால், மிகவும் பிடித்து விட்டது.
அவரை நேரில் சந்தித்து வாழ்த்த வேண்டும் என்று ஆசையில் இருக்கிறேன். அதற்கு ஏற்பாடு செய்வீர்களா? அவரது சட்ட ஆராய்ச்சிக்கு நிதியுதவி செய்வதற்காகவே, தினமும் தூக்கும் மூட்டைகளோடு கூடுதலாக நான்கு மூட்டைகளை தூக்குவேன்.
அவரது நீதியைத்தேடி... பிணை (ஜாமீன்) எடுப்பது எப்படி? உதவியால், என் மீது காவலூழியர்கள் தொடர்ந்த பொய்யான குற்றவியல் வழக்கில் திருப்பூர் ஜே.எம் 2. வழக்கு எண் சிசி 180/2012 வழக்கில் நானே வாதாடி வெற்றி பெற்றேன்.
அதனால் தாங்கள் தங்களிடம் உள்ள அவரது அனைத்து நூல்களையும் பட்டியில் இடவும். உடனே வாங்கி விடுகிறேன். நன்றி!
குறிப்பு: இந்த தகவலை எனக்கு அனுப்ப, இது எந்த அளவிற்கு உண்மை என்பதை சரி பார்க்க, ஆசிரியர் திரு. Warrant Ba-Law அவர்களுக்கு அனுப்பினோம்.
அவர் திருப்பூர் ஜே.எம் 2. வழக்கு எண் சிசி 180/2012 அல்ல என்றும், வழக்கு எண்ணில் ஏதோ பிழை இருக்கிறது என்றும் சொல்லி விட்டார்.
இதனால், சரவணனிடம் சரியான வழக்கு என்னை கேட்டபோது, அவர் விடுதலை செய்யப்பட்டதை அறிவிக்கும் தீர்ப்பு நகலை அனுப்பி வைத்தார்.
அதன் மூலம் சரியான வழக்கு எண் சி.சி 120 / 2013 என்பதை அறிந்து, அதன் தீர்ப்பு நகலை இணையப் பக்கத்தில் இருந்து எடுத்து, தன் பாணியில் ஆராய்ந்தார். அவர் ஆராய்ந்தால், நிதிபதிகள் சிக்காமல் இருப்பார்களா?
ஆமாம், சரவணனை பிணையில் எடுத்த பொய்யரே, வாதாடியதாக தீர்ப்பில் பொய்யாக குறிப்பிட்டு உள்ளதை கண்டு பிடித்து விட்டார்.
சரி, சரவணன் ‘‘தானே வாதாடியாதாக சொல்வதற்கு என்ன ஆதாரம் இருக்கு?’’ என்ற நியாயமான கேள்வி உங்களுக்கு எழ வேண்டும். எழுந்தால் உங்களுக்கு சிந்திக்கும் திறன் இருக்கு.
ஆமாம், நம் வேலையை நாமே திறம்பட செய்வதற்கும், கூலிக்கு மாரடிப்பவர்களை வைத்து செய்வதற்கும் வித்தியாசம் தெரியாதா? என்பதற்கு ஏற்ப...
இவரே வாதாடினார் என்பதற்கான சான்றுகள் அதே தீர்ப்பில் இருக்கிறது என்பதை ஆராய்ந்து விட்டார். பின்ன சட்ட ஆராய்ச்சியாளர் என்றால் சும்மாவா?!
இதனால், விடுதலை தீர்ப்பு சொன்ன நிதிபதி (நடுவர்) பழனி பொய் வழக்குப் போட்ட காவலூழியர்களுக்கு சட்டப் பிரச்சினை வரக் கூடாது என்பதற்காகவே, கேனச் சந்துருவைப் போல தீர்ப்பை திரித்து எழுதி உள்ளார்.
தீர்ப்புகளை எப்படி ஆராய வேண்டும் என்பதற்காக இதனை மநு வரையுங்கலை! நூலில் தொகுத்து அளித்து உள்ளேன்.
இதனை நாம் கையிலெடுத்தால், சட்டப்படி நிதிபதி (நடுவர்) பழனி பணியில் நீடிக்க முடியாது. இதுபற்றி விரிவானதொடு ஆய்வுக் கட்டுரையை திரு. Warrant Ba-Law அவர்களே நேரம் இருக்கும்போது பதிவிடுவார்.
தன் வழக்கில் தானே வாதாடி விடுதலைப் பெற்ற திருப்பூர் சரவணனுக்கு நம்முடைய நல்வாழ்த்துக்கள். இவர் பொய் வழக்குப் போட்ட காவலூழியர்கள் மீது உ(ய)ரிய சட்ட நடவடிக்கை எடுத்தால் சாதனையில் சாதனை படிக்கலாம்.
எது எப்படி இருப்பினும், சாதாரண மனிதனும் வழக்கில் வாதாடனும்; சாதிக்கனும் என்ற திரு. Warrant Ba-Law அவர்களின் இலட்சிய இலக்கு எல்லையை கடந்து சென்று கொண்டே இருக்கிறது.
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment