பொதுவாக சிறை என்றாலே அது போகக் கூடாத இடம் என்ற எண்ணமே பரவலாக இருக்கிறது. ஆனால், இந்த எண்ணம் உண்மையான சமூகப் போராளிகளுக்கு இருக்காது. இருக்கவும் கூடாது. அப்படி இருந்தால், அவர்கள் போராளியே அல்ல.
ஆம், இந்த உலகத்தில் நாம் நினைக்கும் இடங்களுக்கு எல்லாம், அதற்கான வசதி இருந்தால் செல்ல முடியும்.
ஆனால், நாம் நினைத்தாலும் செல்ல முடியாத ஒரு இடம் இருக்கிறது என்றால், அது சிறைதான்! அதனால்தான் சொல்கிறேன், ஜெயிலுக்கு போகவும் அதிர்ஷ்டம் வேண்டும்!!
அதனால்தான், ‘‘நீதியைத்தேடி... பிணை (ஜாமீன்) எடுப்பது எப்படி?’’ நூலின் தத்துவமாக, ‘‘நீதிமன்றத்தில் வாதாடி பிணையில் வருவது மட்டுமல்ல; சிறைக்குள் செல்வதும் சாதனைதான்’’ என்ற தத்துவத்தை முன்மொழிந்து உள்ளேன். எனக்கு தெரியவே இந்தத் தத்துவம் பல பேரை சிந்திக்க வைத்திருக்கிறது.
உடனே சிறைக்கு போவதெல்லாம் அதிர்ஷ்டமா, ஒரு குற்றம் புரிந்தால் உடனே போய் விடலாமே என நினைத்தால் அது தவறு. குற்றம் புரியாமல் சிறைக்கு செல்வதற்குதான் அதிர்ஷ்டம் வேண்டும். குற்றம் புரிந்து விட்டு செல்வது துரதிருஷ்டம். இந்த துரதிருஷ்டத்தை தான் விரும்பக் கூடாது.
நம் விடுதலைப் போராட்ட விரர்கள் அனைவரும், மக்களுக்கு விடுதலை வேண்டும் என்பதற்காக சிறைக்கு சென்றார்கள்.
பெருமையாக பேசப்பட வேண்டிய இச்செய்திகளை நமக்கு பயத்தை உண்டாக்க வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு எதிர்மறை வரலாறாக திரித்து எழுதி வைத்து உள்ளார்கள்.
இந்தியாவின் மீது நம்பிக்கை இழக்காமல் 17 முறை போர் தொடுத்தான் என்று சொல்லும் வரலாறு, அப்படி போர் தொடுத்தவனுக்கு நம்மாளுங்க 16 முறை ஆப்படித்து அனுப்பினார்கள் என்ற பெருமையை சொல்லாதது போல்தான் சிறையைப் பற்றியதும் திரித்து சொல்லப் படுகிறது.
இதற்குப் பிறகு ஹீலர் பாஸ்கருக்கு சிறை செல்லும் வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காது என்பதே என் கணிப்பு.
ஆகையால், கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி சிறையில் உள்ள கைதிகளுக்கு இருக்கக்கூடிய பல்வேறு உடல் நலக் குறைபாடுகள், மனநல கோளாறுகளுக்கு தீர்வு தந்து விட்டு, பிணையில் வரவேண்டும் என அவரே நினைக்கும் போது வெளியில் வரட்டும்.
அவரே நினைத்தாலும், சட்டப்படி அறுபது நாட்களுக்கு மேல் விசாரணை காலத்தில் சிறையில் இருக்க முடியாது. இதுபற்றி எல்லாம் தெளிடைய விரும்புபவர்கள் நான் இரண்டாவது நூலாக எழுதியுள்ள நீதியைத்தேடி... பிணை (ஜாமீன்) எடுப்பது எப்படி? நூலைப் படித்து தெளிவடைக.
மற்றபடி, ஹீலர் பாஸ்கருக்கு ஆதரவு தருகிறேன் என்றப் பெயரில் அவரவர் இஷ்டம்போல் எதையாவது வீணாக செய்து, அவருக்கு அவப்பெயராக அமையும்படி எதையும் செய்து விடாதீர்கள்.
ஆமாம், ஹீலர் பாஸ்கரின் மீதுள்ள அன்பால், உணர்ச்சி வசப்பட்ட நிலையில், சரியான சட்ட விழிப்பறிவுணர்வு இல்லாமல், ‘நீங்கள் செய்யும் காரியங்கள், மீம்ஸ் உள்ளிட்ட பதிவிடும் பதிவுகள், பகிரும் பதிவுகள்’ ஆகியவை தேவையில்லாத சட்டப் பிரச்சினைகளை உண்டாக்கி விடும். இதற்காகவே காத்திருப்பார்கள். எச்சரிக்கை!
நேரம்: 17-10
குறிப்பு: கடைசி இரண்டு பத்தியை என்னுடைய அனுமானத்தின் பேரிலேயே எழுதினேன். இதையே இன்று சிறையில் சந்தித்த நபர்களிடமும் ஹீலர் பாஸ்கர் சொல்லி அனுப்பி உள்ளார்.
ஒத்த சிந்தனையில் உள்ளவர்கள் இப்படித்தான் ஒரே மாதிரியாக சிந்திப்பார்கள் என்பதால், இதில் ஆச்சரிப்பட ஒன்றுமில்லை.
நேரம்: 17-10
குறிப்பு: கடைசி இரண்டு பத்தியை என்னுடைய அனுமானத்தின் பேரிலேயே எழுதினேன். இதையே இன்று சிறையில் சந்தித்த நபர்களிடமும் ஹீலர் பாஸ்கர் சொல்லி அனுப்பி உள்ளார்.
ஒத்த சிந்தனையில் உள்ளவர்கள் இப்படித்தான் ஒரே மாதிரியாக சிந்திப்பார்கள் என்பதால், இதில் ஆச்சரிப்பட ஒன்றுமில்லை.
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment