சட்ட விரோதத் தொழிலைச் செய்யும் பொய்யர்களின் தொழில் மீது உங்களுக்கு என்னதான் வெறுப்பு இருந்தாலும், அதுக்காக இப்படியெல்லாமா தலைப்பை போட்டு எங்களை பயமுறுத்துவீங்க என நினைக்காதிங்க!
ஏற்கெனவே, ‘‘நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த தன் மனைவி இறந்து விட்டாள்’’ என நாடகமாட,
தன் கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் பெற்றுத்தர கோரி வழக்கு (தொ, கொ)டுக்க வந்தப் பெண்ணை...
பொய்யர் கொலை செய்து, இவளை தன் மனைவி என்றும் இறந்து விட்டாள் என்றுங்கூறி எரியூட்டியப்பின்,,,
அப்பொய்யன் கொலை வழக்கில் செய்தியை, ‘மநு வரையுங்கலை!’ நூலின் ‘உரிமையியல் நடவடிக்கைகள்’ என்ற அத்தியாயத்தில் ‘‘பொய்யர்கள் குற்றவாளிகளே’’ என்றத் தலைப்பில் சொல்லி உள்ளேன். இதை வைத்துத்தான் இப்படியொரு தலைப்பை கொடுத்துள்ளேன்.
இந்த நிலையில், இந்தப் பொய்யர் கிழக்கு கடற்கரை சாலையில் நிலம் வாங்கிப் போடும் அளவிற்கு கோடிக்கணக்கில் வழக்காளிகளை கொள்ளையடித்து இருக்கிறார்.
ஆகையால்தான் பாதுகாப்பிற்காக துப்பாக்கி உள்ளிட்டவற்றை வாங்கி வைத்திருக்கிறார் போலும்.
இதில் மிகவும் ஆச்சரியப்பட வேண்டிய விசயம் என்ன வென்றால், ‘‘பொய்யர்கள் பலருக்கு 300 ஏக்கர் இடமெல்லாம் கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கிறது’’ என்று நேற்று (23-03-2018) தான் எனக்கு நம்பத்தகுந்த தகவல் கிடைத்தது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக, அடுத்த நாளான இன்றே இந்த செய்தி வெளிவந்து உள்ளது.
என்னுடைய கணிப்பில், இவரது நிலத்தில் தோண்டிப் பார்த்தால் ஆட்டோ சங்கர் பலரை கொலை செய்து புதைத்தது போல ஓரிரு தோட்டத் தொழிலாளர்கள் உட்பட சிலரின் உடல்களாவது கிடைக்குமென நம்புகிறேன்.
ஆம், பலபேர் இருக்கக் கூடிய தங்கும் விடுதியிலேயே இப்படி அராஜகம் என்றால், அவருக்கு சொந்தமான ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் எத்தனை நபர்களை சுட்டுப் புதைத்தானோ!
ஆமாம், இவனுக்கு கொடுக்கப்பட்ட மொத்த தோட்டாக்கள் எத்தனை என்பதையெல்லாம் விசாரிக்க வேண்டும்.
பாதுகாப்புக்கு பயன்படுத்த வேண்டிய கைத்துப்பாக்கியை தவறாக பயன்படுத்தியதால் அதனை பறிமுதல் செய்து, அதற்கான உரிமத்தையும் முடக்க வேண்டும்.
சென்னை அண்ணா நகரில் வசிக்கும் பொய்யனுக்கு பொய்த்தொழில் செய்வதற்கான அடையாள அட்டை மதுரை முகவரியில் இருப்பதால், இது எந்த அளவிற்கு உண்மை என்பதிலும் எனக்கு சந்தேகம் இருக்கிறது.
சென்னை அண்ணா நகரில் இடத்தின் மதிப்பு கோடிக் கணக்கில் என்றால், அங்குள்ள வீடு எப்படி வந்தது... கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நிலம் எவ்வளவு எப்படி வந்தது முறைப்படி விசாரித்தால், என்னென்ன வேதாளங்கள் கிளம்புமோ...
‘‘நிதியைத்தேடி அலையும் நம் தறுதலை வாசகர்கள்’’ ஆலோசனை கேட்டு வரும் அப்பாவி மக்களை ஏமாற்றி நிலத்தை எழுதி வாங்குவது போல, வழக்கிற்கு என வந்த வழக்காளிகளிடம் இருந்து இந்தப் பொய்யனும் வழிபறி செய்திருப்பானோ... யாருக்கு தெரியும்?!
‘‘நிதியைத்தேடி அலையும் நம் தறுதலை வாசகர்கள்’’ ஆலோசனை கேட்டு வரும் அப்பாவி மக்களை ஏமாற்றி நிலத்தை எழுதி வாங்குவது போல, வழக்கிற்கு என வந்த வழக்காளிகளிடம் இருந்து இந்தப் பொய்யனும் வழிபறி செய்திருப்பானோ... யாருக்கு தெரியும்?!
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment