அரசின் கூலிக்கு மாரடிக்கும் எவரும்,
காரிய அடிமைகளே! கயமைக் கோமாளிகளே!!
வெள்ளையர்களை விஞ்சிய கொள்ளையர்களே!!!
என்பது, மநு வரையுங்கலை! என்ற நூலில் முன்மொழிந்துள்ள தத்துவம்.
இந்த மூன்றுக்குள் அடங்காத எவரும் அரசூழியராக இருக்க முடியாது. அப்படி இருக்க நினைத்தால், அவர்கள் அரசூழியர்களாகவே இருக்க முடியாது. இது நானாகவே இருந்தாலும் அப்படித்தான்!
இப்படி, ஓய்வுப் பெற்ற ஒரு தலைமை ஆசிரியரே போலிச் சான்றிதழ்களை அடித்துக் கொடுக்கிறார்கள் என்றால், இதற்கு ஓர் அரசூழியனாக அவர்பட்ட அனுபவங்களே அடிப்படை காரணம்.
ஆமாம், இப்படி ரூபாய் அல்ல அல்ல, அமெரிக்க டாலர் உள்ளிட்ட அனைத்தையுமே அச்சடிக்கிறார்கள். ஆனால், அரசாங்கமோ நாங்கள் அச்சடிப்பது மட்டுந்தான் அசல்; மக்கள் அச்சடிப்பது போலி என்று கூறி, அதற்கான சட்ட நடவடிக்கைகளை எடுக்கிறது.
பட்டப் படிப்பைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள எல்லாப் பல்கலைக் கலகங்களுமே, லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு இப்படி போலிச்சான்றிதழை வழங்குவதாக கூறுகிறார், அப்படி போலிச்சான்றிதழ்களை வாங்கித் தரும், எனக்குத் தெரிந்த, இடைத் தரகர் ஒருவர்!
இவர் நம் வாசகர் என்பது, வெளியில் சொல்லக்கூடாத கூடுதல் கொடுமை!! ஆனாலும், சொல்லியாக வேண்டிய நிலைமை. ஆகையால் சொல்கிறேன்.
ஏன் இப்படிப்பட்ட சட்ட விரோதக் காரியங்களைச் செய்கிறீர்கள் என கேட்டால், ஒருவர் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெற முடியாததால், வேலை வாய்ப்பை இழந்து, அவர் குடும்பமே சோத்துக்கு வழி இல்லாமல் கஷ்டப்படும்.
இதனை நான் குறைந்தப் பணத்தில் குறுக்கு வழியில் சரி செய்து கொடுத்து, வேலை வாய்ப்பை பெற வைப்பதன் மூலம் அவர்களது குடும்பத்தை காப்பாற்றுகிறேன். இதனால், அவர்களது குடும்பம் என்னை மனதார வாழ்த்துகிறது.
எனவே, நான் செய்வது சட்ட விரோதம் என சட்டம் சொன்னாலும், அதைப்பற்றி நான் கவலைப்பட வில்லை. நான் செய்வதும் நியாயந்தான் என்கிறார்.
இவரது குறைந்த செலவால் பாதிக்கப்பட்ட பல்கலைக் கலகங்களின் பண முதலைகள், இவரது குடும்பத்தை சட்ட சிக்கலில் சிக்க வைக்க அதிலிருந்து மீண்டுவர கோடியில் செலவு செய்திருக்கிறார்.
தமிழகத்தில் குறிப்பிட்டுச் சொல்லும் படியான கட்சியில் மாவட்டப் பொறுப்பில் இருந்த இவரிடமே, இவரது கட்சியைச் சார்ந்தப் பொய்யர்கள், பெறும் பணத்தைப் பறித்துக் கொண்டதோடு, பல்வேறு விதங்களில் பயமுறுத்தி உள்ளார்கள்.
இவர் சொன்ன கருத்தின் அடிப்படையில்தான், ‘‘பல ரகப் பொய்யர்கள்’’ என்ற தலைப்பில் கட்டுரையை எழுதினேன். நாம் தேர்ந்தெடுக்கும் பொய்யன் நம் கட்சிக்காரன் அல்லது உற்ற நண்பன் அல்லது உற்ற உறவு என எண்ணி ஏமாற நினைப்பவர்களுக்கு, இவரது அனுபவப் பாடம் பாடமாக அமையும் என்பதால், அவசியம் படித்துப் பாருங்கள்.
இதனாலேயே, அத்தொழிலை விட்டொழித்து இருப்பார் என நீங்கள் நினைத்தால், உங்களை விட (கோ, ஏ)மாளிகள் யாருமில்லை என்றே சொல்லுவேன். இப்போது, குடும்பத்தை தனியாக குடித்தனம் வைத்து விட்டு, ஓரிரு இளைஞர்களை வைத்துக் கொண்டு, அதி தீவிரமாக அவர்களின் பெயரில் செய்து வருகிறார்.
இதிலிருந்து, அவர் செய்வது நியாயமில்லை என்று அவருக்கே தெரிகிறது. ஆனாலும், கடின உழைப்பு இல்லாமலேயே எளிதில் சுளையாக கிடைக்கும் பணத்தை விட மனமில்லை என்பது ஒருபுறம் என்றால், நீயா நானா பார்த்து விடுவோம் என்று போலிச் சான்றிதழ் வழங்குவதில் உள்ள போட்டி மற்றொரு புறம்.
இங்குள்ள பொய்யர்கள் எப்படி, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் போலிச் சான்றிதழைப் பெறுகிறார்களோ அப்படித்தான் இவர்களும், இங்குள்ளவர்களுக்கு அங்கும், அங்குள்ளவர்களுக்கு இங்கும் என மாறிமாறி போலிச்சான்றிதழை வாரி வழங்கி வருகிறார்கள். ஆகவே, இதனை மிகப் பெரிய கும்பல் என்றுதான் சொல்ல வேண்டும்.
இங்குள்ள பொய்யர்கள் எப்படி, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் போலிச் சான்றிதழைப் பெறுகிறார்களோ அப்படித்தான் இவர்களும், இங்குள்ளவர்களுக்கு அங்கும், அங்குள்ளவர்களுக்கு இங்கும் என மாறிமாறி போலிச்சான்றிதழை வாரி வழங்கி வருகிறார்கள். ஆகவே, இதனை மிகப் பெரிய கும்பல் என்றுதான் சொல்ல வேண்டும்.
உண்மையைச் சொல்லப்போனால், நியாயத்துக்கு விரோதமான முறையில் தேர்ந்தெடுக்கப்படும் எந்தவொரு அரசும் உண்மையாக செயல்பட முடியாது என்பதால், போலியாகத்தான் செயல்பட்டாக வேண்டும்.
ஆமாம், பட்டறிவு உள்ளவனைவிட, படிப்பறிவுக்கான சான்றிதழை வைத்திருப்பவனையே அரசு தன் ஊழியனாக தேர்ந்தெடுத்துக் கொள்கிறது என்கிற அவல நிலையில், அப்படிப்பறிவிலும் இட ஒதுக்கீடு அடிப்படையில் அம்மதிப்பெண்ணை கூட எடுக்க தகுதி இல்லாதவர்களையும் அல்லவா ஊழியனாக தேர்ந்தெடுக்கிறது.
இது படிப்பறிவு மற்றும் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்துக்களைப் போன்று தோன்றலாம். ஆனால், உண்மையில் படித்த மற்றும் படிக்காத முட்டாள்களை அரசு அடிமையாக வைத்திருக்கிறது என்பதை எடுத்துச் சொல்லி விழிப்பறிவுணர்வைப் புகட்டுவதே ஆகும்.
தன் திறமைக்கேற்ற ஊழியமும், ஊழியத்துக்கேற்ற கூலியும் கிடைத்தால் போதும் என்கிற எண்ணம் ஒவ்வொரு குடிமகனிடமும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நாம் வாழ்வோமே தவிர, நாடு நாசமாகும் என்ற எண்ணம் இருக்க வேண்டும். இதற்கு பதில் நாமே நாசமாகலாம் என்ற எண்ணம் வளர வேண்டும்.
இந்த எண்ணத்தை மட்டும் வளர்த்துக் கொள்ள ஆரம்பித்தால், நாமேன் நாசமாக வேண்டும் என்ற எண்ணமும் கூடவே வளரும். ஆகையால், நாளுக்கு நாள் தன் திறனை வளர்த்துக் கொண்டே வரமுடியும்.
மாறாக, திறனை வளர்த்துக் கொள்ளாமல் எந்தவொரு குறுக்கு வழியில் எந்தவொரு ஊழியத்துக்கு வந்தாலும் மற்றவர்கள் மதிக்கவே மாட்டார்கள் என்பதால்தான், இட ஒதுக்கீடு அடிப்படையில் வேலைக்கு வந்தவர் களையுங் கூட, சக ஊழியர்கள் பாகுபாட்டோடு நடத்துகிறார்கள்.
எனவே திறமையை வளர்த்துக் கொண்டு, போட்டியாக திகழாதவரை தீண்டாமையை ஒழிக்கவே முடியாது என்பதே என் நிலைப்பாடு.
அரசாங்கத்தின், (கு, கி)றுக்குத் தனமான முயற்சிகள் யாவும் அறியாமை, தீண்டாமை உள்ளிட்டவற்றை வளர்த்தெடுக்கும் என்பதோடு, காலா காலத்திற்கும் மக்களை மன ரீதியாக அடிமைகளாகவும், நோயாளிகளாகவும் வைத்திருக்கவே செய்யும். அரசே இப்படித்தான் என்னும்போது, அரசூழியர்களும் அப்படித்தானே இருப்பார்கள்?
பொதுவாக, நான் அரசூழியர்களை கேள்வி கேட்டு அனுப்பும் சட்டப்பூர்வ அறிவிப்புக்களில் அல்லது கடிதங்களில், ‘‘நீங்கள் படித்து ஊழியத்துக்கு வந்தீர்களா அல்லது பணம் கொடுத்து வந்தீர்களா’’ என்றுதான் கேட்பேன். இப்படிக் கேட்டால்தான், கொஞ்சமேனும் தங்களின் அறிவுவறுமையைக் கண்டு பயப்படுவார்கள். சட்ட சிக்கலுக்கு பயந்து கடமையைச் செய்வார்கள், அறிவை வளர்த்துக் கொள்ளவும் முயற்சிப்பார்கள்.
அவ்வூழியர்கள் அடாவடி பெண் ஊழியராக இருக்கும் பட்சத்தில், இந்த வரிசையில் கூடுதலாக ஒரு கேள்வியை சேர்த்துக் கொள்வேன் என்பதை, ‘‘மநு வரையுங்கலை!’’ நூலைப் படித்தவர்கள் அறிந்திருப்பீர்கள். இப்படிக் கேட்டாலும் கூட, இவர்கள் அடங்குவதில்லை. காரணம், கடைசியாக கேட்ட கேள்வியில் இருக்கும் உண்மைதான்!
இந்த வகையில், நியாயமான சிந்தனை கொண்ட என் கேள்விகள் எப்போதும் சரியாகத்தான் இருந்து இருக்கின்றன என்பது, எப்போது எனக்கு தெரிய வந்தாலும், எனக்கே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது!
சேர்க்கை நாள்: 22-02-2018
சேர்க்கை நாள்: 22-02-2018
நாங்கூட, போலிச் சான்றிதழ்கள் மட்டுந்தான் கிடைக்குமென நினைத்து இருந்தேன். ஆனால், தங்கப் பதக்கமே கிடைக்கும் என இந்த செய்தியின் மூலமே தெரிந்தது. ஆண்களுக்கு பெண்கள் சற்றும் சலைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கிறார்கள் போலும்.
சேர்க்கை நாள் 23-02-2018
ஓ, இவ்வளவுதானா முனைவர் பட்டம்!
எனக்கு, ‘முனைவர்கள் எல்லாம் முட்டாள்கள்’ என்ற கருத்து ஏற்கெனவே இருந்தது, தற்போது உறுதியாகி விட்டது.
சேர்க்கை நாள் 05-03-2018
நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரி பார்ப்பு என பல்வேறு வழிமுறைகளை கையாளும் போது, எப்படி போலிச் சான்றிதழ் கொடுத்து சேரமுடியும்?
சேர்க்கை நாள் 05-03-2018
நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரி பார்ப்பு என பல்வேறு வழிமுறைகளை கையாளும் போது, எப்படி போலிச் சான்றிதழ் கொடுத்து சேரமுடியும்?
இந்த வழிமுறைகளில் கண்டாறியாதவர்களில் மீது, ஊழியத்தில் கடமை தவறல் என ஏன் வழக்குப் பதிவு செய்வதில்லை??
முறைகேடான வழியில் இலஞ்சங் கொடுத்து பணியில் சேர்ந்து விடலாம் என நினைப்பவர்கள், இப்படி சட்டப் பிரச்சினைகளை சந்தித்து வேலை வாய்ப்பு கிடைக்காமல் தின்டாட வேண்டி இருக்கும்.
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment