நாடு முழுவதும் உள்ள சிறைகளில், பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன என்பதை நான் நன்கறிவேன். ஆனாலும், இதுபற்றி நூல்களில் அவ்வளவாக எழுதியதில்லை. ஏனெனில், இதுபோன்ற விடயங்கள் வெளியில் தெரிந்தால், எல்லோருமே தவறாகப் பயன்படுத்த தொடங்கி விடுவார்கள் என்பதால்தான்!
ஆனால், தற்போது சிறையைப் பற்றிய தகவல்கள் பலவாறாக வெளிவந்த வண்ணம் உள்ளது. ஆகையால், இனி மறு பதிப்பாக புதுப்பிக்க இருக்கும் நீதியைத்தேடி... பிணை (ஜாமீன்) எடுப்பது எப்படி நூலில் சிறையில் நடக்கும் பல்வேறு விடயங்களைப் பற்றி எழுத எண்ணி உள்ளேன்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சசிகலா உள்ளிட்டோருக்கு, இரண்டு கோடி ரூபாயை லஞ்சம் பெற்றுக் கொண்டு சிறையில் வசதிகள் செய்து கொடுத்ததான விவகாரத்தில், தன் மீதான மான நஷ்ட வழக்கில் ரூபா தானே வாதாடப் போவதாக அறிவித்து உள்ளார்.
உண்மையில் அரசூழியர்களுக்காக, அரசுப் பொய்யர்கள்தான் வழக்கு தொடுப்பார்கள், வாதாடுவார்கள். ஆனால், இங்கு வழக்கு தொடுப்பவரும், அதனை எதிர் கொள்பவரும் அரசூழியர்களே என்பதால், இவ்விரண்டு ஊழியர்களுக்காகவும் அரசுப் பொய்யர்கள் வாதாட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.
இதனால் வழக்கு தொடுப்பவர் தனிப்பட்ட முறையில் பொய்யரை வைத்துதான் வழக்கு தொடர முடியும். இதுவே அவருக்கு பாதகமான, ரூபாவுக்கு சாதகமான நிலைதான்.
ஆமாம், அவர் சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்பட்டு இருந்தால், அரசே அவருக்கு அதரவளிக்கும் விதமாக அரசுப் பொய்யரை வழக்கு தாக்கல் செய்ய அறிவுறுத்தும்.
வழக்கை எதிர்கொள்ள இருக்கும் ரூபாவுங்கூட, எதிர்வழக்காட அரசின் உதவியை கோரலாம். ஆனால், அரசுப் பொய்யர்களையும், தனது பொய்யர்களையுங் கூட நம்பாமல் தானே வாதாடுவது என முடிவு செய்திருப்பது, நிச்சயம் திருப்பு முனைதான்!
எனவே, தன்னுடைய நியாயத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக இப்படியொரு முன்மாதிரி முடிவை எடுத்த ரூபாவுக்கு நம் வாழ்த்துக்கள்!!
இப்படியொரு முடிவை ஏற்கெனவே தேர்தல் வழக்கொன்றில் சகாயம் எடுத்திருந்தாலும், ரூபாவின் முடிவு சமூகத்தில் நல்லதொரு விழிப்பறிவுணர்வை ஊட்டும். குறிப்பாக, கன்னட மக்களுக்கு நல்லதொரு வழிகாட்டு செய்தி!
நம்மால் இயன்ற வழிகாயை ரூபாவுக்கு காட்டும் விதமாக நீதியைத்தேடி... குற்ற விசாரணைகள் நூலின் கன்னட பதிப்பையும், இந்திப் பதிப்பையும் அனுப்பி வைக்க உள்ளோம்.
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment