சட்ட சிக்கலே இல்லாமல், மிகவும் எளிதாகவும் தெளிவாகவும் தீர்க்க வேண்டிய ஜல்லிக்கட்டு பிரச்சினையை, இவ்வளவு தூரம் பெரிதாக்கியப் பின்னுங்கூட,
அது அப்படி, இது இப்படியென இன்னும் பில்டப் கொடுத்து சொதப்பிக்கிட்டு இருக்கிறாங்கன்னா...
இதில் சம்பந்தப்பட்டவர்கள் முழுக்க முழுக்க
1. அரசியல் வியாதிகள் அரசியல் ஆதாயம் தேடுறாங்க...
2. நிதிபதிகள், நிதி ஆதாயம் தேடுறாங்க...
3. சட்ட அதிகாரத்தில் இருப்பவர்கள் அனைவரும், அடிப்படை சட்டங்கள் ஐந்தில் அளவற்ற அறிவு வறுமையில் இருக்கிறாங்க...
4. இதன் மூலம், இதெல்லாம் சாதாரண விசயமல்ல; சட்ட விசயம். ஆகவே ரொம்பவே கஷ்டமென சொல்லாமல் சொல்லி, மக்களுக்கு சட்டத்தைப் பற்றிய பயத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்து கிறார்கள்.
ஆமாம், இந்திய சாசன கோட்பாடு 254(2) இன்படி, மாநில அரசு இதுதொடர்பான சட்டத்தை இயற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றால்தான் செல்லும்.
இல்லையெனில், மத்திய அரசின் சட்டத்துக்கு எதிரானது என்று செல்லாதது ஆகிவிடும்.
இதனை, இந்திய சாசன கோட்பாடு 255 இன்படி, மாநில அரசு சட்டம் கொண்டு வருவதற்கு முன்பே, தானே முன்வந்துங்கூட குடியரசுத் தலைவர் முன் கூட்டியே ஒப்புதலை வழங்க முடியும்.
சட்ட ஆராய்ச்ச்சியாளர் என்ற என் நிலைப்பாட்டில், இதில் புடுங்குவதற்கு வேறு ஒரு ஆணியும் இல்லை.
இதில், நாம் மிக முக்கியமாக புரிந்து கொள்ள வேண்டியது, அமைப்பு அல்லது அதிகாரம் என்று வந்து விட்டால், எளிதாக முடிக்க வேண்டிய காரியத்தை, அது ஒவ்வொன்றும் எப்படி எல்லாம் சுற்றி வளைத்து கடினமாக்கு என்பதைத் தான்!
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment