இன்று, 30.11.2016 அன்று, மின்னஞ்சலில் வந்த வாசகரின் கேள்வியும், எனது பதிலும்!
ஐயா
வணக்கம்
தங்கள் படைப்புகள் அனைத்தும் சமுதாயத்திற்கும் தனி மனிதனுக்கும் பயனளிக்கிறது. அதுவும் மனு வரையுங்கலை புத்தகம் எனக்கு மிகவும் பிடித்தது.
வாட்டாச்சியரின் மிரட்டல் தொடர்பாக ஒரு சந்தேகம்
நான் நீர்வழி ஓடை /பாதை ஆக்கிரமிப்பை அகற்ற கோரி அரசு ஆணை 540ன் கீழ் வட்டாட்சியருக்கு மனு செய்திருந்தேன்.
வட்டாச்சியர் 60 நாட்கள் ஆகியும் எந்த அறிக்கையும்/தகவலும் தராதாதால் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்திருந்தேன், தகவலுக்காக அந்த மேல்முறையீடு விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியிருந்தேன்.
மாவட்ட ஆட்சியர் கோட்டாட்சியருக்கு ஒரு கடிதம் அனுப்பி அந்த கடிதத்தில் என்னுடைய மனு மீது நடவடிக்கை எடுத்து தீர்வு செய்ய உத்திரவிட்டுருந்தார். அந்த நகலும் எனக்கு அனுப்பியிருந்தார்கள்.
இந்த கடிதம் வட்டாட்சியருக்கு அனுப்பப்படவே இல்லை. ஆனால் வட்டாச்சியர் என்னை அழைப்பாணை அனுப்பாமலே மூன்றாம் நபர்களிடம் கூறி அலுவத்திற்கு வரச்சொல்லியிருந்தார்.
நான் அவர் அலுவலகத்திற்கு சென்ற பொது வட்டாச்சியர் என்னை பார்த்து “இதுபோன்ற கடிதம் எழுதினால் உன்னை சிறையில் அடைத்துவிடுவேன் என்று மிரட்டினார். நான் இந்த நீர்வழி ஓடை /பாதை ஆக்கிரமிப்பை பற்றி கூறிவிட்டு” அமைதியாக அந்த அலுவலகத்திருந்து வந்து விட்டேன்.
நான் இப்பொழுது யாரிடம் புகார் செய்யலாம். என்ன செய்ய வேண்டும். தங்கள் மேலான அறிவுரையை வழங்கினால் எனக்கு பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி
ரமேஷ்
சட்டத்தை சரியாகப் படிக்காமல் செயல்பட்டால் இப்படித்தான் நடக்கும். எந்தவொரு ஆக்கிரமிப்புக்களையும் அகற்ற வேண்டியது கிராம நிர்வாக ஊழியரின் பொறுப்பு.
எனவே ஆக்கிரமிப்பு குறித்து, முதலில் சான்று நகல் கேட்டிருக்க வேண்டும். பின் நினைவூட்டல் அனுப்பி இருக்க வேண்டும். அடுத்தகட்டமாக அறிவிப்பு அனுப்பி இருக்க வேண்டும். இதுபற்றி ‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’’ நூலில் எழுதி உள்ளேன்.
இதன் நகலை கு.வி.மு.வி 133 இன்படி, வட்டாட்சியரில் இருந்து மாவட்ட ஆட்சியர் வரை போடலாம். இல்லையெனில், இவ்விதியின் கீழ் நேரடியாகவே இவர்களுக்கு மனு அனுப்பி இருக்கனும். இதன் நகலை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்பி இருக்கனும்.
இப்படி அமலில் உள்ள வலுவான மத்திய சட்ட விதியை விட, மாநில அரசின் அரசாணை குப்பைக்கு சமமானது என்பது, அரசூழியர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆகையால், அதையும், பயன்படுத்தும் நபரையும் மதிக்க மாட்டார்கள்.
மாவட்ட ஆட்சியரின் கடிதத்தின் மீது, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, கோட்டாச்சியரிடம் சான்று நகலைக் கேட்டிருக்கனும்.
இப்படி செய்யாமலும், அழைப்பானை இல்லாமலும் போனது தவறு. சிறையில் அடைப்பேன் என மிரட்டியபோது, அடை என்று சொல்லி விட்டு அங்கேயே உட்கார்ந்து இருக்கனும்.
இப்பவுங்கூட, மிரட்டியதற்கான காரணத்தை சான்று நகலாக கேட்டும், சிறையில் அடைக்கவும் சொல்லி மனு அனுப்பலாம்.
மொத்தத்தில், நீங்கள் நீதியைத்தேடி... நூல்களின் அடிப்படை கருத்தையே உள் வாங்கிக் கொள்ளவில்லை என்பது தெளிவு. ஆனால், இந்நூல்கள் பெரிதும் உதவியாய் இருப்பதாக சொல்லி உள்ளது, நீங்களே உங்களை ஏமாற்றிக் கொள்ளும் செயல்.
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment