அடிப்படையில் சொல்லப்போனால், பொய்யக்குத்தான் விளம்பரந் தேவையே ஒழிய, உண்மைக்கு ஒருபோதும் விளம்பரந் தேவையில்லை.
இது சட்டத்தொழிலை வரையறை செய்யும், இந்தியப் பொய்யர வைக்கும் நன்றாகவே தெரிந்திருக்கிறது. ஆகையால், அப்பொய்யரவை இயற்றிய பொய்யர்களுக்கான விதி 36 இல், ‘‘பொய்யர்கள் தனது தொழிலை எவ்வகையிலும் விளம்பரப்படுத்த கூடாது; பெயர்ப்பலகையும் சிறிய அளவில் இருக்க வேண்டும்’’ என்று அறிவுறுத்தி உள்ளது.
இப்படிப்பட்ட, மேலும் பல அறிவுறுத்தல்களை நீதியைத்தேடி... சட்ட அறிவுக்களஞ்சியம் நூலில் தொகுத்துள்ளேன்.
மேற்சொன்ன அறிவுறுத்தல் விதியின்படி பார்த்தால், பொய்யர்கள் அறிமுக அட்டையை (விசிட்டிங் கார்டு) கூட கொடுக்க முடியாது. ஆனால், பொய்யர்களோ பெயர்பலகை என்ற பெயரில், பொய்யர்கள் பெரிய விளம்பரப் பலகையையே வைத்துக் கொள்கிறார்கள்.
தங்களின் வாகனத்தில் அல்லது கிடைத்த இடத்தில் எல்லாம் தங்களைப் பற்றி விளம்பரம் செய்து கொள்கிறார்கள். நீதிமன்ற வளாகங்களில் உள்ள நோட்டரிப் பொய்யர்கள் எல்லாம், தங்களைப் பற்றிய பெரிய விளம்பரத்தை வைத்துக்கொண்டு, வருவோர் போவார்களை எல்லாம் கூவிகூவி அழைப்பதையும் பார்த்திருப்பீர்கள்.
இப்பொய்யர்கள் தற்போது, இணையத்தையும், சமூக வலைத்தளங்களையும் பயன்படுத்தி ஆள் பிடிக்க ஆரம்பித்து விட்டனர்.
பொய்யர்களுக்கான பட்டப் படிப்பில் குறுக்கு வழியிலோ அல்லது வேறு வழியிலோ தேர்ச்சி பெற்று, பொய்யரவையில் சேரும் பொய்யர்கள், சிறிதும் வெட்கமின்றி தங்களின் சேர்க்கை குறித்து கட் டவுட் வைத்துக் கொ(ல், ள்)கிறார்கள்.
பொதுவாக, இப்படி வைக்கப்படும் கட் டவுட்டுகளில் பெறும்பா(ழா, லா)னவை, யாருக்காக வைக்கப்படுகிறதோ, அவர்களது சொந்த செலவில், அவர்களது அடிமைகளின் பெயரில் அல்லது அவர்கள் சொல்லி, அவர்களது அடிமைகள் வைப்பதே அன்றி அல்லது தங்களது சுய ஆதாய விளம்பரத்துக்காக வைப்பதே அன்றி, அன்பின் மிகுதியால் வைப்பது அன்று!
ஆமாம், அன்பின் மிகுதி என்பது, அவரவர் உள்ளத்தில்தான் இருக்குமே தவிர, ஒருபோதும் ஊரறியச் செய்யாது.
தொல்லைக்காட்சி பேட்டிகளில், ஒரு வழக்கில் வாதாடிய பொய்யர் பேட்டி அளிக்கும் போது, பல பொய்யர்கள் அடித்துப் பிடித்துக்கொண்டு முங்காட்டுவதை எல்லோருமே பார்த்தி ருப்பீர்கள்.
இதெல்லாம் தெரிந்திருந்தால், இப்பொய்யர் உச்சநீதிமன்றத்துக்கு மேல்முறையீடு சென்றிருப்பாரா?
இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள தினமலர், இதனால் ஊடகங்களுக்கு பின்னடைவு என்றுதான் சொல்லுமா??
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment