மருத்துவ(ம், ர்கள்) குறித்து மகாத்மா காந்தி சொல்லியுள்ள விசயத்தில், ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைகளாக வைத்திருப்பதற்கு மருத்துவத்தை மிகச்சரியானபடி உபயோகித்துக் கொண்டனர் எனக் கூறியுள்ளார். இது முற்றிலும் உண்மை.
ஆங்கிலேயர்கள் நம்மை விட்டுச் சென்று நெடுங்காலமாகி விட்டப்பின்னுங்கூட, அவர்களது பழக்க வழக்கங்களை அப்படியேப் பின்பற்றுவதால் அனைத்து விதத்திலும் அடிமைகளாய் இருக்கிறோம்.
இயற்கையின் அற்புதப்படைப்புளான உடல் உறுப்புகள் எல்லாம் அறிவு வறுமை ஆங்கில மருத்துவர்களால், அறுவை சிகிச்சை என்கிற பெயரில் வெட்டியெறிந்து, உயிருடன் உள்ளபோதே பாதி பிரேத பரிசோதனை முடித்து விடுகிறார்கள்.
சமீபத்தில் வெளிவந்துள்ள, சதுரங்க வேட்டை என்கிற திரைப்படத்தில் கூட, ‘ஏழைகளின் உடலை வைத்து மருத்துவத்தைக் கற்றுக்கொள்; அதனை பணக்காரனுக்கு பயன்படுத்தி பணத்தை சம்பாதித்துக்கொள்’ என்று மருத்துவத்துறையில் நடக்கும் அவலங்களை வெட்ட வெளிச்சமாகவே சொல்கிறார்கள்.
ஒருபக்கம் உரிமைக்காக போராடவேண்டிய நிலையென்றால், மறுபக்கமோ உடல் ஆரோக்கியத்திற்காகவும், உயிருக்காகவும் போராடிக் கொண்டே இருக்கிறோம் என்பதால், இவற்றைக் குறித்தும் விழிப்பறிவுணர்வை ஏற்படுத்த வேண்டியுள்ளது. எனவேதான், இதனை அப்படியே பதிவிடுகிறேன்.
சில தினங்களுக்கு முன், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்குச் செல்லநேர்ந்த போது, உண்மையில் நாட்டில் இவ்வளவு புற்றுநோயாளிகள் இருக்கிறார்களா என எண்ணத்தோன்றியது. பாரம்பரிய வைத்திய முறையை பரப்புவோர், முகாமிட வேண்டிய இடம், இதுபோன்ற நோய் உற்பத்தி மருத்துவனைகளேயன்றி வேறில்லை.




வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
இதுபோன்ற உடலின் உன்னதங்களை ஒவ்வொருவரும் உணர வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.
ReplyDelete