வாசகர்களில் (வெகு சிலர்) சும்மாவே நான் அதைச் செய்தேன், இதைச் செய்தேன் என பீலா விடுபவர், சாதனையை செய்து விட்டு சொல்பவர், செய்த சாதனையை கூட சொல்லாதவர் என மூன்றாக பிரிக்கலாம்.
இதில் பெரும்பாலும், மூன்றாவது வகையினரை தவிர, மற்ற இரு வகையினரும், நான் இவ்வளவு தூரம் சாதனை புரிய காரணமே நீங்கதாம், உங்க சட்ட விழிப்பறிவுணர்வுதாம் என்பார்கள். இதிலும், பீலா பார்ட்டிகளோட தொல்லை தாங்க முடியாது.
அவர்களுக்கு ஒரே வார்த்தையில் நான் சொல்வது, ‘எல்லா வாசகர்களும் சாதித்து விடுவதில்லை. அப்படியரு சூழ்நிலை வரும்போது, அதற்கு நான் பொறுப்பேற்க தயார். மற்றபடி, நீங்கள் நிகழ்த்திய சாதனைகளுக்கெல்லாம் நீங்களே பொறுப்பு’ என்பதே!
படிக்கும் எல்லா வாசகரும் பக்குவப்பட்டு விடுவதில்லை என்பதும், பக்குவப்பட்டவர்களே பலனை அடைகிறார்கள் என்பதுதானே எதார்த்த உண்மை!
நமது சட்ட விழிப்பறிவுணர்வு எந்த அளவிற்கு வாசகர்களிடம் சென்றிருக்கிறது, சட்டத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை அலசி ஆராய்ந்து முடிவை அறிவிக்க வேண்டும் என நினைத்தோம்.
பொதுவாக கருத்துக்கணிப்பு என்பது வெளிப்படையாக நடத்தப்படுவதால் மிகமிக துள்ளியமானதாக, உண்மை நிலையை உணர முடியாமல் போய் விடுகிறது. ஆதலால், இக்கருத்துக் கணிப்பை மாற்று முறையில் செய்ய வேண்டும் என எண்ணினோம்.
புகழ் பெற்ற தமிழ் திரைப்படங்களில் ஒன்று திருவிளையாடல். மனிதனின் வாழ்க்கைக்கு அவசியத் தேவை எது ‘‘கல்வியா, செல்வமா, வீரமா’’ என போட்டி வைத்து இம்மூன்றுமே அவசியத் தேவை என்பதை உணர்த்துவார்கள்.
வாசகர்களை வறுத்தெடுத்து, பன்படுத்தும் சட்டத் திருவிளையாடலுக்கு ‘‘கடமையா!! உடமையா! மடமையா?’’
2009 எப்ரல் 1 ஆம் தேதி முட்டாள்களின் தினம்.
இதற்கு முந்தைய வாரம்தான், சேலத்து பொய்யர்களை வறுத்தெடுத்திருந்தோம். இதனை இன்று உண்மையாக்கி, வாசகர்களின் சட்டத்தெளிவை பரிசோதித்து விடுவது என்று முடிவு செய்தோம்.
ஆதலால், ‘சேலத்து பொய்யர்கள் கொடுத்த புகாரின் பேரில், என்னை சென்னையில் கைது செய்து, சேலத்தில் வைத்து விசாரணை செய்து கொண்டிருப்பதாகவும், ஆதலால் என்னை யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும், தொடர்பு கொண்டால் நீங்களும் விசாரணைக்கு ஆளாக நேரிடும்’ என்ற குறுஞ்செய்தியை தேர்வு செய்திருந்த பத்து வாசக பெருமக்களுக்கு அனுப்பினோம்.
அவ்வளவுதான், கைது விசயம் நல்லாவே பத்திகிச்சு.
முதலில் தொடர்பு கொண்டது தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்த இன்பம். நானும் காவலரைப் போல் மாற்றுக்குரலில் ஏடாகூடமாகவும், மரியாதை இல்லாமலும் பேச தயாரானேன்.
இன்பம்: இனிய காலை வணக்கத்தை உரித்தாக்கி கொள்வது இன்பம்.
வாபா: உனக்கு யாரு வேணும்?
இன்பம்: நீங்க வாரண்ட் பாலா சார்தான?
வாபா: இல்லை. அவரை விசாரிச்சிக்கிட்டு இருக்கோம். நீ என்ன அவனோட நண்பனா?
இன்பம்: இந்த நம்பர் கும்பகோணம் இல்லியா? சாரி சார். ராங் நம்பர் என்று கூறி இணைப்பை துண்டித்துக் கொண்டார்.
என்ன இன்பம்... சட்ட விழிப்பறிவுணர்வால் ஊர்ல அதைச் செய்தேன், இதைச் செய்தேன்னு சொல்லுவீங்க. என்னாத்த செய்திங்களோ...
அடுத்து திருவண்ணாமலையில் இருந்து கந்தசாமி... வணக்கம் சார்.
வாபா: சொல்லுயா, நீ எந்த ஊர்லேந்து பேசுற. உன்பேர் என்ன? அட்ரச சொல்லு...
சாமி: பாலா சார் இல்லிங்களா?
வாபா: நீ என்ன அவனோட கூட்டாளியோ? உன் அட்ரச சொல்லு, முதல்ல...
சாமி: இல்லிங்க சார் என்று கூறி விட்டு தன்னோட பேரு, ஊரு எல்லாத்தையும் மாத்தி மாத்தி சொல்றார்.
வாபா: என்ன பேர மாத்தி சொல்லுற? செல்லுல உம்பேரு கந்தசாமின்னுல்ல வந்தது என்றதுமே கட்.
என்ன கந்தசாமி... தெரிந்த தகவலை வேண்டுமென்றே மாற்றி சொல்வது சட்டப்படி குற்றம் இல்லையா... என்னாத்த சட்டம் படிக்கிறீங்களோ?
அடுத்ததாக சேலத்தில் இருந்து இரண்டு மனோகர்கள். முதலில் மனித உரிமைகள் பேசும் மனோகர்...
மனோ: வணக்கம் சார். நல்லா இருக்கீங்களா?
வாபா: பாலா விசாரணையில இருக்காரு. நீ எந்த ஊர்லேந்து பேசுர? அட்ரச சொல்லு?
மனோ: யோசித்து யோசித்து தவறான சென்னை முகவரி ஒன்றை சொல்கிறார்.
அடுத்ததாக போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் மனோகர்...
மனோ: வாரண்ட் பாலா சார் இருக்காங்களா? (நான் கைதாகிட்டேன் கன்ஃபார்ம் பன்னிட்டார்)
வாபா: நீ என்ன அவனோட நெருங்கிய கூட்டாளியா?
மனோ: ஆமாம், இல்ல இல்ல... சும்மா தெரியும்.
வாபா: எங்கேந்து பேசுற?
மனோ: சேலத்தில் இருந்து... அத்தோடு கட்.
அடுத்ததாக நாமக்கல்லில் இருந்து மனித உரிமை மதியழகன்... (நான் உண்மையிலேயே கைதாகியிருக்கேன்னு நினைத்து... அப்படி போடுங்க, இப்படியும் நடக்கும்னு நம்பனும்)
மதி: வாரண்ட் பாலா சார்கிட்ட பேசனும்.
வாபா: நீ யாரு, எங்கே இருந்து பேசுற?
மதி: மனித உரிமை இயக்கம் நாமக்கல்லில் இருந்து பேசுறேன்.
வாபா: யோவ், நீ யாரா இருந்தா எனக்கென்ன?
மதி: என்ன சார் மரியாதை இல்லாம பேசுறீங்க? (அட, தைரியம் பரவாயில்லியே)
வாபா: என்ன மரியாதையா பேசுங்குற... உன் பேரு என்னான்னுதான கேட்டேன்?
(உண்மையில், பேர மட்டும்தான் சொல்லனும், என்ன பண்ணுறீங்கன்னு கேட்டாதான், பண்ணுற வேலைய சொல்லனும்)
மதி: மதி, நாமக்கல்லில் இருந்து பேசுறேன். (இப்ப சரியாயிடுச்சி பாருங்க!)
வாபா: சரி, விசாரிச்சிகிட்டு இருக்கோம். நீ அப்புறமா பேசு...
இதுக்கு மேல என்ன பொய் பேசுறதுன்னு தெரியல. வார்த்த வேற வர மாட்டேன்னு அடம்பிடிக்குது. தொண்ட வேற வலியெடுக்க ஆரம்பிச்சிடுச்சி. பழக்கம் இல்லாததுதான் காரணம்.
ஆனால், நான் எதிர்பார்த்தபடி சட்டக் கடமையை ஆற்றும் இந்திய குடிமகன் பேசுரேன்னு சொல்லி கதிகலங்க வைப்பாங்கன்னு பார்த்தா, ஒருத்தர் கூட சொல்லல.
இப்படி தொடர்பு கொண்டவர்களின் பலரது தொடர்பை, மரியாதைக் குறைவாக பேச வேண்டிய காரணத்தினாலேயே ஏற்றுக் கொள்ள முடியாமல் போனது. ஏற்றுக் கொண்டவர்கள் எல்லாம், சூழ்நிலைக்கு தக்கவாறு மரியாதைக் குறைவாக பேசியதை பொறுத்துக் கொள்ள கூடியவர்கள்.
இப்படி ஒரு பக்கம் தொடர்பு கொள்ளாதீர்கள் என்று சொல்லியிருந்தும் கூட, விசாரணைக்கு பயப்படாமல் பலர் தொடர்பு கொண்டது அவர்களின் சட்டக் கடமையை உணர்த்தியது.
அழைப்பை எடுத்ததுமே குரலை மாத்தி பேசி எல்லோரையும் ஏமாத்துற மாதிரி என்னை ஏமாற்ற முடியாது என்றது, சேலம் கதிர்வேல். ( அட்ரா சக்க... இவர் ஒரு தொழிற்சங்கவாதி)
முட்டாள் தினம் அதுவுமா ஏமாற தயார் என்றாலும், வாரண்ட் பாலா கைது என்று ஏமாற தயாரில்லை என்று பலர் கூறியுள்ளனர். சபாஷ்! ஆனாலும், ரொம்ப ஓவர் கான்பிடன்ட்!!
அப்படி என்ன தப்பா சொல்லிட்டாரு கைது செய்ய என்றது ஓசூர் நாகஜோதி பாபு. (சரிதான்!)
கைது செய்த காவலர்கள் இவர்கிட்ட மாட்டிக்கிட்டு என்ன பாடுபடுறாங்களோ... நமக்கு பார்க்க கொடுத்து வைக்கலியே என்பது நாமக்கல் தனம். (அய்யோ பாவம்!)
இவரைப்பற்றி மேலும் அறிய இங்கு சொடுக்கவும்.
ஒருசிலர், மூன்று வாரண்டை ஐந்து வருடமாக வச்சிகிட்டு அலையுற அவர இந்த காலத்துல மட்டுமில்ல எந்த காலத்திலேயும் கைது செய்ய முடியாது. அப்படி செய்தால் நீதிபதிகளுக்கு நேரம் சரியில்லை என்று அர்த்தம்.
சரிதான், எத்தனை பேரு இப்படி கிளம்பியிருக்கீங்க?
காந்தி சொன்னதைத்தான் நான் சொன்னேன் என்பதால் காந்திதான் முதல் குற்றவாளி. முதலில் அவரை கைது செய்து விட்டு, என்னை கைது செய்ய வா என்பார் என்பது போடி ராஜசேகரன்.
சாட்சியத்தோட பேசுரதுல ரொம்பவே தெளிவாயிருக்காரு பாருங்க...
ஒருவேளை கைது செய்திருந்தால் என் சொத்து அத்தனையையும் சூரிட்டியா கொடுத்து பிணையில எடுப்பேன் என்றது ஈரோடு போக்குவரத்து கழக தொழிற்சங்கவாதி குணசேகரன்.
சபாஷ்! இப்படித்தான், எதுவானாலும் பரவாயில்லைன்னு தெளிவா இருக்கோணும்.
சரி, வாசகர்கள் இப்படி இருக்கும் போது, வாசகர் மற்றும் வாசகரில்லா பொய்யர்கள் எப்படி இருக்காங்க என்கிற சோதனையில்...
வாசகர்: வாரண்ட் பாலாவ கைது பண்ணிட்டாங்க பெயில்ல எடுக்கனும்...
பொய்யர்: கவலைப்படாதிங்க. பெயில்ல எடுத்துடலாம். என்ன.. கூடுதல் செலவாகும்.
இதுதான், சந்துல சிந்து பாடுறதுங்கிறது... ஏமாத்துறதுல என்னா திறம!
வாசகர்: அதுக்கென்ன பிளாங் செக்கே தர்றேன். நீங்க எவ்வளவு வேண்டுமானாலும் போட்டுக்குங்க... ஆனா, இன்னைக்கே வாரண்ட் பாலாவ பெயில்ல எடுத்தாகனும்னு ஒத்தக்காலில் நிக்க...
நம்மைப்பற்றி நன்றாக அறிந்த பொய்யரின், கூட்டாளி பொய்யர்...
கூபொ: அவன் நம்மளைப்பத்தி எவ்வளவு மோசமா எழுதுறான். அவன பெயில்ல எடுப்பியா நீன்னு கேட்க, யாரு எது செஞ்சாலும் அத ஆதரிக்கிறதுதானே நம் தொழிலுன்னு சொல்லி ரெண்டு பேரும் மல்லுக்கு நிக்கிறாங்க...
பொய்யர்கள் நினைக்கிறபடி இவ்வளவு மோசமா எழுதுற நம்மகிட்டையே நடந்துகிற யோக்கியதை இதுன்னா, நீங்க மாட்டினா... யோசிச்சு பாருங்க!
இடையில் நாரதராக வந்த சேர்ந்த நம் வாசகியான பெண் பொய்யர்
பெபொ: ஏம்பா தேவையில்லாம நீங்க சண்டப் போட்டுக்குறீங்க... ஜாமீன் எடுப்பது எப்படின்னு புத்தகம் எழுதின அவரு, எல்லோரையும் ஜாமீன்ல எடுப்பாரு...
ரொம்ப தெளிவாத்தான் இருக்கீங்க... நல்லாத்தான் சொல்லுறீங்க... ஆனா, அந்த பாவத்துக்கு எல்லாம் நான் ஆளாக விரும்பல.
பெபொ: அவங்களோட புத்தகத்தை விக்கிறத்துக்காக புரளிய கிளப்பி விட்டுகிட்டு அலையுறாங்க... என்பது கும்பகோணத்தில் மூன்று பொய்யர்கள் மற்றும் வதந்தியை கிளப்பி விட்ட வாசகருக்கு இடையில் நடந்த உரையாடல்.
அதான பார்த்தேன். போயும் போயும் யார, யாரை ஏமாத்தப் பாக்குறீங்க... ஊர்ல ஆரம்பிச்சு உலகத்தையே பொய்திறமையில ஏமாத்திகிட்டு இருக்கிற எங்களையே ஏமாத்த பாக்குறீங்களா...
பொய்யர்கள் புத்தகத்த விக்க கிளப்பி விட்ட புரளி போலன்னு, நீங்க யாராவது நினைத்தால், அதற்கு நாங்க பொறுப்பல்ல.
வாசகரரோட, பொய்யர்களோட நிலைகளை பாத்தாச்சு, போலீசோட நிலை என்னான்னு பார்க்க வேண்டாமா...
தான் காவல்துறையில் பணியாற்றிய போது, தனக்கு கீழ் பணியாற்றி பின் சேலம் மாநகர காவல் ஆணையராக இருந்தவரை பிடித்து பல விதங்களில் லெப்ட் ரைட் வாங்கி விட்டார், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஓய்வுற்ற மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வீ.செ.கருப்பண்ணன்.
இவர், உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்து மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளராக உயர்ந்தவர். தான் தொடுக்கும் வழக்குகளில் அரசுப் பொய்யர்கள் மற்றும் கொள்ளையர்கள் ஏடா கூடமாக எதாவது செய்தால், அவர்களை ஒருவழி பண்ணிவிடுவார். நமது நீதியைத்தேடி... நூல்களை அவ்வப்போது ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்து வருபவர்.
கொடுமையிலும், கொடுமை என்னான்னா, காந்தியின் இந்தியத் தன்னாட்சி நூலை வைத்திருப்பதே குற்றம் போல என்று நினைத்த ஒரு வாசகர், அதனை தீயிட்டு எரித்தே விட்டார் என்பதுதாம்.
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
இந்த சட்டப் பல்கலை கழக தளத்தின் நோக்கம் ஓர் உயரிய நோக்கம். வழக்கறிஞருக்கு படிக்கவில்லை என்று எனக்கு இருந்த குறைபாடு, நாமே வாதாடலாம் என்பதை அறிந்ததும் போய்விட்டது. இத்தளம் சிந்திக்க வைக்கிறது.
ReplyDeleteநானும், என் நண்பரும் வேறு சாதியை சேர்ந்தவரை சாதி மறுப்பு பதிவுத்திருமணம் செய்து கொண்டோம். அவரது மனைவியை அவளது பெற்றோர்களே கொலை செய்து விட்டார்கள்.
இந்த வழக்கு கடந்த பத்து வருடங்களாக நிலுவையில் இருக்கிறது. காரணம், அப்பெண்ணின் தந்தை வக்கீல். ஆதலால், எங்களில் ஆறு பேர் மீது பொய்ப்புகாரை காவல் நிலையத்தில் கொடுக்க, அவர்கள் ஏற்க மறுத்ததால், நீதிமன்றத்தில் தனிப்பட்ட வழக்காக பதிவு செய்துள்ளார்.
இந்த வழக்கு சம்பந்தமாக என்னென்ன விபரங்களை கேட்க வேண்டும்?
நீதியைத்தேடி... நூல்களை வாங்கி படித்துக் கொள்ளுங்கள். இதற்கு 9842909190, 9150109189 ஆகிய உலாப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்.
ReplyDelete