2009 ஆம் ஆண்டு, மகாத்மா காந்தியின் இந்திய சுயராஜ்யம் நூலுக்கு நூற்றாண்டு விழா. பலருக்கும் தெரியாமல் இருந்த வக்கீல்கள் மற்றும் நீதிபதிகள் குறித்து காந்தியின் வெறுப்பு கருத்துக்களை நீதியைத்தேடி... சட்ட அறிவுக்களஞ்சியம் நூலில் பரபரப்பாக பரப்பிய நேரம்.
அதாவது, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பொது நூலகங்கள், காவல் நிலையங்கள், சிறைசாலைகள் மட்டுமில்லாது, நீதிபதிகள் அத்தனை பேருக்கும் பல புண்ணிவாவாங்க கொடுத்த பங்களிப்பு நிதியில நன்கொடையாகவே கொடுத்தாச்சு!
[caption id="attachment_390" align="alignleft" width="219"]

சேலத்தில் பி.ஆர்.ஜெயராஜன் அப்படீன்னு ஒரு சட்டப்புளி. சண்டக் கல்லூரி மாணவர்களுக்கு தேவையான குப்பை நூல்களை தீர்ப்புகளில் இருந்து காப்பியடித்து எழுதுபவர். ஆதலால், இவரைத் தெரியாத பொய்யர்களே, வக்கீல் தொழில்ல இருக்க முடியாது.
இவரது வழக்கறிஞர் தொழில் நெறிமுறைகள் என்கிற புத்தகத்தில், "வக்கீல்கள் நீதிமன்றத்தின் அதிகாரிகள் (என்னமோ கெவுருமண்டு கூலி வாங்குறாப்புல, கௌரவப் பேரு) என்றும், வக்கீல்கள் இல்லையென்றால் எதுவுமே நடக்காது (உண்மைதான், நீங்க இல்லேன்னா நாட்டுல எந்த குற்றமும் நடக்காது) என்பன போன்று பல பீலாக்கலை அவிழ்த்து விட்டிருப்பார்".
எல்லா வக்கீல்களுமே பேச்சளவில் பீலா பார்ட்டிகள்தாம். அதனால்தாம், பொய்யர்கள் என்கிறேன். மகாத்மாக்கள் தொழில் ரீதியாக விபச்சாரிகள், ஈனப்பிறவிகள் என்கிறார்கள். ஆனால், இவரோட பீலா சகித்துக் கொள்ள முடியாத அளவிற்கு இருக்கும்.
இதைப் படிக்கும் சண்டக் கல்லூரி மாணவர்களுக்கு, நாம்தாம் உலகத்தையே உருட்டி, பெறட்டி கொண்டு இருக்கிறோம் (அவ்வப்போது அவங்களுக்குள்ளியே உருட்டு கட்டையால உருட்டி, பெறட்டி அடிச்சிக்கிறாங்கல்ல... அத மனதுல வச்சிதான் சொல்றாரு) இல்லையென்றால் எதுவுமே நடக்காது (நீங்க இல்லேன்னா என் பொழப்பு நடக்காது) என்று, எதிர்கால பொய்யர்களுக்கு (எ, வெ)றியூட்டுவார்.
இவரு (எ, வெ)றியூட்டுறத நிப்பாட்டனும்னா, மொதல்ல இவருக்கு நம்ம பாணியில (எ, வெ)றியூட்டனும் இல்லியா... அதனால, இவருக்கு சட்ட அறிவுக்களஞ்சியம் நூல் ஒன்றை வாசகர் ஒருவர் அனுப்பி வைத்து, காந்தி இப்படி சொல்லியிருக்காரா என (நா, தே)டிப்பிடித்து பார்த்து வறுத்தெடுக்க ஆரம்பிக்கிறார். அதுவும் எப்படி...
அய்யா, நான் உங்களின் தீவிர வாசகன். உங்க புத்தகங்கள படிச்சிதான், ஓரளவுக்கு சட்டத்தையே தெரிஞ்சிகிட்டேன் என்பதால் உங்கமேல, எனக்கு அவ்வளவு மதிப்பு மரியாதை உண்டு. ரொம்பத்தான்!
‘நீதியைத்தேடி... சட்ட அறிவுக்களஞ்சியம்கிற புத்தகத்துல மகாத்மா காந்தி வக்கீல் தொழிலப்பத்தி ரொம்ப கேவலமா சொல்லியிருக்கார்னு எழுதியிருந்துது.
அதப்படிச்ச எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்ததுடுச்சி...
நீங்க எவ்வளவோ புத்தகம் எழுதியிருக்கீங்களே... உங்களுக்கு தெரியாம இருக்காது.
அதான் உண்மை என்னான்னு உங்களை கேட்டு தெரிஞ்சிக்கலாம்னு அந்த புத்தகத்தையே நேத்து அனுப்பி வச்சேன்.
படிச்சிங்களான்னு’ நல்லாவே (எ, வெ)றியூட்டிட்டார்.
பத்த வச்சிட்டியே பரட்ட...
பீலா பார்ட்டிக்கே பீலா விடுறதுங்கிறது இதுதாம் போல...
அதைப் படித்ததும் டென்சனாகி, "காந்தி மகான் தான் எங்களுக்கெல்லாம் வழிகாட்டும் தெய்வம். அவரு சத்திய சோதனைன்னுதானே புத்தகம் எழுதுயிருக்கார்". மற்றபடி, அவரு இப்படியெல்லாம் சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.
காந்தி போர்பந்தர் என்னும் சிற்றூரில் பிறந்தார். அரிச்சந்திரா நாடகம் பார்த்தார். அன்று முதல் பொய் பேசுவதில்லை என்று முடிவெடுத்து, பொய்யரானார் (வக்கீலானார்). சுதந்திரம் வாங்கித்தந்தார். அவ்வளவுதானே நாம அவரப்பத்தி நம்ம பாழாப்போன கல்வித் திட்டத்துல படிச்சது. இததானே அவரும் படிச்சிருப்பார்.
போர் பந்தர் என்பது, நூறு வீடுகள் உள்ள சிற்றூர் அல்ல. அந்த காலத்திலேயே பல்லாயிரம் மாட மாளிகைகளை கொண்ட, போர்பந்தர் ஸ்டேட். அதாங்க இப்போ மாநிலம்னு சொல்லுறது போல, அப்ப மாகாணம். துறைமுகம் இருக்குன்னா பார்த்துக்கோங்க.
போர் பந்தரில் பிறந்த காந்தி, "போரே கூடாது (போரால் அழிக்க முடியுமே ஒழிய சேர்க்க முடியாது) என்றார்".
பொய் பேசக் கூடாது என்று முடிவெடுத்து, "பொய்யர்களின் தொழிலிலும் உண்மையே பேசினார்".
தவறு செய்தவர்கள் தன் கட்சிகாரர்களாகவே இருந்தாலும், "அதனை நீதிபதியிடம் எடுத்துரைத்து தண்டனை வாங்கி தந்தார்".
இதற்கு இலக்கணமாக அவமானம் என்பது, ‘‘குற்றம் புரிவதில்தாம் இருக்க வேண்டுமே தவிர, அக்குற்றத்துக்கான தண்டனையை அனுபவிப்பதில் இருக்க கூடாது’’ என்றார்.
இதுபோன்ற மகத்தான செயல்களாலேயே, "மகாத்மா என்று மக்களால் அழைக்கப்பட்டார்".
ஆங்கிலேயர்களின் சட்டத்தை, அவர்களது நாட்டுக் சென்று படித்து, "அச்சட்டத்தின் வழி நின்று அகிம்சை முறையில் ஆங்கிலேயர்களுக்கு இம்சை கொடுத்ததால், அவர்கள் இந்தியாவை விட்டு விட்டு, இரவோடு இரவாக தப்பியோடி விட்டனர்" என்கிற எதார்த்த உண்மையை எழுத வேண்டும்.
சரி, நம்ம வறுவல் விசயத்துக்கு வருவோம்.
இப்படியெல்லாம் எழுதின வாரண்ட் பாலா மேல வழக்கு போட்டு, அவன உண்டு இல்லைன்னு பண்ணுறேன்னு சொல்ல...
வாசகரோ இந்திய சுயராஜ்யம் நூலில் 11 வது கட்டுரைன்னு கடைசியில சொல்றாரே, அதப் பாத்திங்கன்னா உண்மை தெரிஞ்சிரும்ல என்று மீண்டும் உசுப்பேத்தவே, சரி என்று கூறி விட்டு, தனது கன்று குட்டிகளை (பயிற்சிக்கு வந்துள்ள பொய்யர்களை) விட்டு, புத்தகத்தை அலுவலம் முழுவதும் தேடியும் அகப்படல.
தெய்வத்தோட புக்க வாங்கி வெச்சிருந்தாதானே அகப்பட...
மறுநாள், சேலத்து பொய்யர்களுக்கெல்லாம் இந்த தகவல் பத்திக்கிச்சு. ஒரு பொய்யர் கூட, காந்தி சொன்னதாக சொல்லுறத நம்பல. சேலத்து சட்டப்புளியே நம்பாத போது, எலிகள் எல்லாம், எளிதில் நம்பிடுமா என்ன?
உண்மையை நம்புவதா அவுங்க தொழிலு தர்மம்...
இந்தியாவுல இருக்கிற வக்கீல்கள், நீதிபதிகள் மற்றும் காந்தியவாதிகள் உட்பட யாருக்கும் தெரியாது இருந்த ரகசியம் (தெரிந்தவர்கள் யாராவது இருந்திருந்தா, பரப்பாமல் பாதுகாத்ததாலும் கூட ரகசியமே) வெளி வந்ததாலேயும் நம்ப முடியல.
அடுத்த நாள் சனிக்கிழமை, கோர்ட்டு வேற லீவா போச்சு. சுயராஜ்யம் நூலை சேலத்தில் எங்கு தேடியும் கிடைக்கல. ஆனாலும் அதுக்குள்ள, என்னைய இப்படிப் பண்ணலாம், அப்படி பண்ணலாம்னு, ஆளாளுக்கு கூட்டம் கூட்டமா ரூம் போட்டு (யோ, பே)சிக்கிறாங்க. தெருவுலியோ, வீட்டுலியோ நின்னு பேசினா, எல்லோருக்கும் வதந்தியாகி, வக்கீல் தொழிலே வாந்தியாயிடுமே?
சரி, சட்ட அறிவுக்களஞ்சியத்துல சொல்லியிருக்கிற மதுரை காந்திய இலக்கிய சங்கத்திற்கே போய் வாங்கிடலாம்னு (எங்கும் கிடைக்காதுன்னு நன்னா தெரிஞ்சிதான் நானே காந்திய இலக்கிய சங்கத்தை குறிப்பிட்டுள்ளேன்) பார்த்தா, அடுத்த நாள் ஞாயிறா போச்சு.
அதனால என்ன, வாரண்ட் பாலா புலி வால புடிச்சிட்டான். இருக்கிற வால புடிச்சிருந்தா கூட பரவாயில்லை. இல்லாத வால புடிச்சிட்டான். எப்படி இருந்தாலும், திங்க கெழம நூலை வாங்கினதும் அவன் கதை சேலத்துல நாற போகுதுன்னு, ‘நானென்னவோ நடிகை குஷ்பு போல அழகா இருப்பேன், வர வச்சு பக்கத்துலியே பார்க்கலாம்கிற விபரீத ஆசையில' என்மீது வழக்கு போட ஆளாளுக்கு மனு தயாரிச்சிட்டாங்க?
என்னமோ உத்திர புத்திரன் தொழில் போல, நம்ம தொழிலுக்கு இப்படியரு கேவலமா என்று மூணு நாளா டென்சனாகி, ஒழுங்காக சாப்பிட முடியாம, டென்சன குறைக்க அப்பப்ப டீய, டீய குடிச்சி தூக்கம் கெட்டு, நைட்டோட நைட்டா ரெண்டு பேரு மதுரைக்கு போயி, விபச்சார கவலைய மறக்க லாட்ஜில லைட்டா சரக்கு போட்டும், தூங்க முடியாம, காலையிலேயே காந்திய இலக்கிய சங்கத்துல, எப்படா கதவ திறப்பாங்கன்னு காத்து கிட, வாங்கி படிச்சா...
பாலா, நம்மல போல பீலா உடல... அவரு சொன்னத தில்லாவும், தூளாவும் தெளிவா தொகுத்து ஒழுங்குபடுத்தி சொல்லியிருக்கான்னு தெரிஞ்சதும், அவங்களோட அத்தனை பில்டப்பும் புஸ்வானம் போல, ஓரிரு நிமிடங்களில் எல்லாம் புஸ்சுன்னு போயிடுச்சி.
இவ்வளவு வெறியையும் சட்டம் படிக்கிறதுல காட்டியிருக்கனும். நாம என்ன தொழில் செய்யிறோம் அப்படீன்னு கொஞ்சம் யோசித்து பார்த்தா, உலகிற்கே தெரிகிற உண்மை உங்களுக்கு விளங்காதா... பொய்யிலேயே ஊறிப்போய், நாறி நாற்றமெடுத்து கிடந்தா இப்படித்தாம் எதையுமே நம்ப முடியாது. ஆனாலும், இப்படித்தாம் அற்ப விசயத்துக்கு கூட அப்படிச் செய்யலாம், இப்படிச் செய்யலாம்னு பெரிசா பில்டப் காட்டிட்டு, யாரும் எதிர்பார்க்காத வகையில் கை விட்டுடுவாங்க. அவுங்கல மட்டும் சொல்லல.
உங்களையும் சேர்த்துதாம் கைவிட்டுடுவாங்கன்னு சொல்லுறேன். ஆனா, அதுக்குல்ல உங்க கிட்டேந்து சம்பாதிக்க வேண்டியத சம்பாதிச்சி புடுவாங்க (பிடுங்கி புடுவாங்க).
இவ்வளவு நடந்தத்துக்கு அப்புறமும், தொழில் நெறிமுறைகள் நூல்ல விட்டிருந்த பீலாக்கலை எல்லாம் திருத்தி எழுதினாரான்னு தெரியாது. ஆனால், ஒவ்வொரு முறை படிக்கும் போதும், மனது உறுத்தும்ல...
தாத்தாவோட இந்திய சுயராஜியத்துக்கு இப்பேல்லாம் ரொம்பவே மதிப்பு அதிகமாகிடுச்சி.
2004 ஆண்டுல அச்சடிச்ச ஆயிரம் புத்தகம் கூட 2008 வரை, விற்பனையில் இருந்திச்சு. ஆனா, 2009 நூற்றாண்டு விழாவுல இருந்து இரண்டாயிரம், இரண்டாயிரமா அச்சிட்டாலும் கூட, ஆறு மாதத்துகுள்ள காலியாகிற அளவுக்கு, யாரோ ஒரு சிலர்தாம் ஒன்னு, ரெண்டு வாங்குறாங்களாம். மத்தவங்க எல்லாம் மொத்தமாகத்தாம் வாங்குறாங்களாம்.
அதனால, அப்பப்ப அச்சடிக்கிறோம். திடீர்னு ஏனிப்படின்னு தெரியல அப்படீன்னார், அப்பாவியாக அதன் நிர்வாகிகளில் ஒருவரான திரு.ராமதாஸ். அப்புறம்தான், எல்லா தாத்தாவும் பேரனுக்கு பணத்த சம்பாதிச்சு வெச்சிட்டு போவாங்க. அதனால, அது அவங்க குடும்பத்தோட நின்னு போயிடும்.
ஆனா, காந்தியோ நமக்கு தேவையான கருத்துக்களை வெதச்சி வச்சிட்டு, இதவச்சி சுயமா பொழச்சிக்கோன்னு சொல்லிட்டு போயிருக்கார். அதனாலதானோ என்னவோ, நாம அவருக்கு பணம் சம்பாதிச்சி கொடுக்குற நெலம ஆயிடுச்சுன்னு, நடந்ததை எல்லாம் விளக்கமா எடுத்துச் சொன்னேன்.
கேர் சொசைட்டியில இருந்து கூட நீதியைத்தேடி... புத்தகங்களை வாங்குற ஒவ்வொருவருக்கும் இதன் ஒரு தமிழ் பிரதிய சேர்த்து அனுப்புவாங்க. இதோட ஆங்கில பதிப்பு தேவைப்படுறவங்க இங்கு சொடுக்கினால் தரவிரக்கி கொள்ளலாம்
இறுதியா, நம்ம வாசகரு சேலத்து சட்டப்புளிய தொடர்பு கொண்டு கேட்டத்துக்கு, ‘‘அந்த கிறுக்குப்பய (வேற யாரு, வழிகாட்டியும் தெய்வமும் ஆன காந்திதாம்) நூறு வருசத்துக்கு முன்னாடி சொன்னத, இந்த கிறுக்கு பய (வேற யாரு, நாந்தேன்) இப்போ, எதுக்கு எல்லோருக்கும் எடுத்து சொல்லிக் கிட்டு இருக்கான்னு தெரியலன்னு முடிச்சிட்டாராம்’’.
ஆகா, என்ன கண்டு பிடிப்பு பாருங்க.
காந்தி உங்களப்பத்தி இப்படியெல்லாம் சொல்லி இருக்கார்னு 2008 இல் தெரியும். ஆனால், 2000 ஆம் ஆண்டில், சட்ட ஆராய்ச்சியில் களமிறங்கியதற்கு காரணமே, உங்களுக்கு எல்லாம், சட்டத்தைப் பற்றி ஒரு புண்ணாக்கும் தெரியாது என்பதை உணர்ந்துதாம், 2010 ஐ இலக்காக வைத்து இறங்கி, முடித்தும் இருக்கிறேன்.
உங்கமேல உள்ள, ஊரரிந்த உண்மைய சொல்லுறத்துக்கே இப்படியெல்லாம் பாடாபடுறீங்களே... மக்களோட உண்மைய பொய்யாகவும், பொய்யை உண்மையாகவும் திரிக்குறீங்களோ, உங்க நாறின பிழைப்புக்காக திருட்டுத்தனம் பண்ணி தீர்ப்ப வாங்குறீங்களே... அப்போ, அவங்க எவ்வளவு கஷ்டப்படுவாங்கன்னு இப்பவாவது புரியுதா? புரியலேன்னா எப்படி புரிய வைக்கனுமோ அப்படி புரிய வைக்கிறதுதான், எங்களோட வாசகர்களோட வேலையே!
ஏற்கனவே, நீதிபதிகளை வறுத்தெடுப்பது பற்றி படிச்சிருப்பிங்க...
இப்ப பொய்யர்களை பத்தியும் படிச்சிட்டிங்க... இப்படி நான் மட்டுமல்ல பல வாசகர்கள், பல பொய்யர்களையும், நீதிபதிகளையும் வறுத்தெடுத்திருக்கிறார்கள். அதையெல்லாம் பின்னால ஒவ்வொன்னா பார்ப்போம்.
அதுக்கு முன்னாடி, அடுத்த வறுவல் பதிவு யாரைப் பற்றின்னு கரெக்ட்டா சொல்லுங்க பார்க்கலாம்...
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment